காமன்வெல்த் 2018: பளுதூக்குதலில் பதக்கம் வென்ற முதல் இளம் இந்தியர்!

69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் லாதர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்

69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் லாதர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காமன்வெல்த் 2018: பளுதூக்குதலில் பதக்கம் வென்ற முதல் இளம் இந்தியர்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் லாதர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.

Advertisment

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் நேற்றுமுன்தினம் துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர். இந்த காமன்வெல்த் போட்டிக்கு “கோல்ட் கோஸ்ட் 18” என்று பெயர் சூட்டப்பட்டது.

முதல் நாளில், இந்திய வீரர் குருராஜா பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இரண்டாம் நாளான நேற்று, மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்று அசத்தினார். நேற்று, இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்குதல் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் லாதர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். இப்போட்டியில் மொத்தம் 295 (136+159) கிலோ எடையை தூக்கிய தீபக் லாதர் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

Advertisment
Advertisements

ஹரியானாவைச் சேர்ந்த தீபக்கின் வயது 18. இதன் மூலம், மிக இள வயதில் காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்குதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தீபக் பெற்றுள்ளார்.

 

Common Wealth Games

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: