Advertisment

'என்னை நானே கிள்ளி பார்த்த தருணம்': தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து நெகிழ்ந்த இளம் வீரர்!

"நான் தோனியை முதல்முறையாக பார்த்தபோது அப்படியே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் முன்னால் அவர் நிற்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று இந்திய இளம் வீரர் துருவ் ஜூரேல் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Dhruv Jurel Recalls His First Interaction With MS Dhoni Tamil News

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India Vs England, 4th Test, Ranchi | MS Dhoni: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ராஜ்கோட் டெஸ்டில், இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

Advertisment

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது. 

துருவ் ஜூரேல் நெகிழ்ச்சி 

இந்நிலையில், இந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தினார். இதன் காரணமாக அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் வேளையில், ராஞ்சியில் நடக்க உள்ள 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்து விளையாட தீவிரமாக தயாராகி வருகிறார். 

இந்நிலையில், தோனியின் சொந்த ஊரான ராஞ்சி நகரில் விளையாட இருப்பது குறித்து துருவ் ஜூரேல் பேசுகையில், "நான் தோனியை முதல்முறையாக பார்த்தபோது அப்படியே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் முன்னால் அவர் நிற்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவர் உடனான முதல் சந்திப்பு எனக்கு 2021 ஆம் ஆண்டில் நடந்தது. முதல் முறை நான் அவரை பார்க்கும்போது உண்மையிலேயே நான் அவரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்பதை பரிசோதிக்க என்னை நானே கிள்ளி பார்த்துக் கொண்டேன்.

நான் ஏற்கனவே தோனியை பார்த்திருந்தாலும் இம்முறை இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு அவரை பார்க்கப் போகிறேன். என்னுடைய கனவே நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பின்னர் அவரை பார்க்க வேண்டும் என்பதுதான். இம்முறை நான் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகிவிட்டு தற்போது அவரை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். அவருடன் எப்போது பேசினாலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ராஞ்சி நகரில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதால் அவரை எப்படியும் சந்திப்பேன்" என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

India Vs England Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment