கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் கோபி கிருஷ்ணன். 31 வயதான இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் முன்னாள் இந்திய கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனியின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோனி மீது உள்ள தீவிர பற்றால் தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் கலரில் மஞ்சல் கலரில் பெயிண்ட் அடித்து வீட்டில் ஒரு பகுதியில் தோனி படம் வரைந்து அசத்தினார். இதனால் அவரை உலக அளவில் உள்ள தோனி ரசிகர்கள் போன் மூலமும், சமூக வலைத்தளங்களில் வழியாக பாராட்டினார். தோனியும் தனது டிவிட்டர் பக்கத்தில் கோபிக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் மேட்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. ஆனாலும் மனம் தளராமல் தோனி மீது கொண்ட நீங்கா பற்றால் தற்போது 07-07-2022 தேதி தோனி 41வது பிறந்த நாளை முன்னிட்டு, கோபி தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலரில் மாற்றியுள்ளார். மேலும் தனது வீட்டில் "ஹேப்பி பர்த்டே தோனி" என்ற வாசகம் எழுதி, தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்து கொண்டு இருக்கின்றார்.
தவிர, இவர் தனது இரண்டு சக்கர வாகனம் மஞ்சள் கலரில் வாங்கி, அதற்கு தோனியின் ஜெர்சில் உள்ள 7 என்ற எண்ணை தனது வண்டியின் நம்பர் பிளேட்டில் 777 வாங்கியும் இருக்கிறார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil