ED Summons Ex cricketers: சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள்: யுவராஜ், உத்தப்பாவுக்கு இ.டி சம்மன்

ED summons Robin Uthappa, Yuvraj Singh in Online Betting App Case: சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ED summons Robin Uthappa, Yuvraj Singh in Online Betting App Case: சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ED betting app case | ED summons former Indian cricketers in Tamil

ED summons former Indian cricketers Robin Uthappa and Yuvraj Singh: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய செப்டம்பர் 22 ஆம் தேதி அமலாக்கத்துறை முன் ஆஜராகுமாறு உத்தப்பாவுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ED Online Betting App Case: நாட்டில் ஏராளமான சட்ட விரோத சூதாட்ட செயலிகள் செயல்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கோடிக்கணக்கான நாட்டு மக்களை காப்பாற்றவும், இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றவும் இது போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. சட்ட விரோத சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்து பிரபலப் படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தெலுங்கானா போலீசார் ஏற்கனவே நடிகர் ராணா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 25 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது.

இதேபோல், சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கள் யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. மேலும் நடிகர் சோனு சூட், நடிகை ஊர்வசி ரவுதேலா ஆகியோரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விளம்பர பிரசாரத்துக்காக இந்த சூதாட்ட செயலிகள் பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ.50 கோடிக்கு மேல் பணம் செலுத்தியதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

அமலாக்கத்துறை விசாரணையில், "1xbat" போன்ற மாற்று தளங்களுடன் இணைக்கப்பட்ட விளம்பரங்கள் தொடர்பாக இந்த நபர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இது இந்திய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அசல் 1xBet தளத்திற்கு பயனர்களை வலை இணைப்புகள் மற்றும் QR குறியீடுகள் வழியாக திருப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள், தற்போதுள்ள சட்ட விதிகளை தெளிவாக மீறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

தகவல் தொழில்நுட்பச் சட்டம், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA), பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) மற்றும் சூதாட்டம் மற்றும் டிஜிட்டல் விளம்பரம் தொடர்பான பல்வேறு அரசாங்க உத்தரவுகளின் கீழ் மீறல்கள் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஊடக நிறுவனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்று தளங்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சேனல்களில் விளம்பரப்படுத்த ரூ.50 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதாக அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளது.

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மே மாதம், தெலுங்கானா காவல்துறை ராணா டகுபதி மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட 25 நடிகர்கள் மீது இதுபோன்ற தளங்களுடன் கடந்த கால தொடர்புகளுக்காக வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கில் புகார் அளித்தவர், சம்பந்தப்பட்ட மோசடியின் அளவு ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை நிதி ரீதியாக பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது என்று தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சில நடிகர்கள் தங்கள் ஒப்புதல்கள் அந்த நேரத்தில் சட்டப்பூர்வமானவை என்றும், ஆன்லைன் திறன் சார்ந்த விளையாட்டுகள் அனுமதிக்கப்பட்ட அதிகார வரம்புகளுக்குள் மட்டுமே இருந்தன என்றும் கூறினர். ராணா டகுபதியின் செய்தித் தொடர்பாளர், திறன் சார்ந்த விளையாட்டுகளை சூதாட்டத்திலிருந்து வேறுபடுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டினார். சத்தீஸ்கரில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தொடர்புபடுத்திய உயர்மட்ட மகாதேவ்  சூதாட்ட செயலி வழக்கைத் தொடர்ந்து இது நடந்தது. முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் சி.பி.ஐ எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்று கூறியிருந்தார். 

மகாதேவ் வழக்கில் மட்டும் ரூ.6,000 கோடிக்கு மேல் சட்டவிரோத வருவாய் ஈட்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரதாரர்கள் இதேபோன்ற உத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர். தடைகள் இருந்தபோதிலும் செயல்பாடுகளைத் தொடர ஃபேர்ப்ளே போன்ற துணை செயலிகளைத் தொடங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் சட்டவிரோத ஆன்லைன் பந்தயப் பொருளாதாரம் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகவும், ஆண்டுதோறும் 30% என்ற விகிதத்தில் வளர்ந்து வருவதாகவும் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த தளங்கள் 110 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களால் பயன்படுத்தப்படுவதாகவும், சிறார் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட தற்கொலைகளுடன் தொடர்புடையவை என்றும் அதிகாரிகள் கூறினர். 

தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறை கடந்த வாரம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி மிமி சக்ரவர்த்தி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா மற்றும் பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்தது. இதே வழக்கில் முன்னாள் இந்திய வீரர்களான ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. குறிப்பாக, ஷிகர் தவானிடம் மட்டும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய செப்டம்பர் 22 ஆம் தேதி அமலாக்கத்துறை முன் ஆஜராகுமாறு உத்தப்பாவுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், யுவராஜ் சிங் ஒரு நாள் கழித்து செப்டம்பர் 23 அன்று ஆஜராகுமாறும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

Robin Uththappa Yuvraj Singh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: