Advertisment

''எனக்கு ஜெய்ஸ்வால் தான் எல்லாமே''... ரசிகையின் காதல் கடிதம் : வைரலாக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த யெஷஸ்வி ஜெய்ஸ்வால், 3-வது டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதம் நடந்து அசத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jaiswal

யெஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது புதிய ரன் மிஷினாக உருவெடுத்துள்ள யெஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ரசிகை ஒருவர் எழுதிய காதல் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றிருந்த நிலையில், 3-வது போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த தொடக்க வீரர் யெஷஸ்வி ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த யெஷஸ்வி ஜெய்ஸ்வால், 3-வது டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதம் நடந்து அசத்தியுள்ளார். இதன் மூலம் 7 டெஸ்ட் போட்டிகளில் 3 சதமங்கள் அடித்துள்ள யெஷஸ்வி ஜெய்ஸ்வால், 3-வது டெஸ்ட் போட்டியில் 104 ரன்கள் எடுத்திருந்தபோது முதுகுவலி காரணமாக வெளியேறினார்.

அதன்பிறகு 4-வது நாளில் மீண்டும் களமிறங்கிய அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2014 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 7 டெஸ்ட் போட்டிகளில் 62.58 சராரியுடன் 751 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் டி20-ல் 17 போட்டிகளில் விளையாடி ஒரு சதத்துடன் 502 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் கவனிக்கப்படும் வீரராக மாறியுள்ள யெஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய ரன் மிஷினாக உருவெடுத்துள்ளார்.

இதனிடையே சதமடித்த யெஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பெண் ரசிகை ஒருவர்,  காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த பதிவில், யெஷஸ்வி ஜெய்ஸ்வால் யார்? பார்வையற்றவர்களுக்கு வெளிச்சம், பசியுள்ளவர்களுக்கு ரொட்டி, நோய்வாய்பட்டவர்களுக்கு சிகிச்சை, தனிமையில் இருப்பவர்களுக்கு துணை, சோகமானவர்களுக்கு மகிழ்ச்சி, சிறை கைதிக்கு சுதந்திரம், எனக்கு ஜெய்ஸ்வால் தான் எல்லாமே என்று பதிவிட்டுள்ளார். 

அவரது பதிவை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணி தனது எக்ஸ் பக்கத்தில், வெளியிட்டுள்ளது. ஜெய்ஸ்வால் சாதித்துவிட்டீர்கள் என்ற இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Yashasvi Jaiswal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment