Advertisment

'இந்திய பேட்டிங்கின் எதிர்காலமே'... சதமடித்து மிரட்டிய ஜெய்ஸ்வாலுக்கு ரசிகர்கள் பாராட்டு மழை!

தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம், சதம் என தனது சிறப்பான பேட்டிங்கை இன்றைய நாள் முழுதும் வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களை குவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Fans praise Yashasvi Jaiswal for his stunning Test hundred vs England Tamil News

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஜெய்ஸ்வால் மிரட்டல் பேட்டிங் - ரசிகர்கள் பாராட்டு மழை!

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs England | Yashasvi Jaiswal: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

Advertisment

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ - வி.டி.சி.ஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் 

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. 

தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம், சதம் என தனது சிறப்பான பேட்டிங்கை இன்றைய நாள் முழுதும் வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜெய்ஸ்வால் மிரட்டல் பேட்டிங் - ரசிகர்கள் பாராட்டு மழை 

இப்போட்டியில் தனது மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 89 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக மட்டையைச் சுழற்றிய அவர் 151 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவரது 2வது சதம் இதுவாகும். 

இதன்பிறகு தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 257 பந்துகளில் 17 பவுண்டரிகள் 5 சிக்ஸர் என 179 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்தில் அசத்தலாக விளையாடிய அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.  மேலும், அவர் நாளைய ஆட்டத்தில் இரட்டை சதம் விளாச வேண்டும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

India Vs England Yashasvi Jaiswal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment