Advertisment

IND vs AUS Final: இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு இவர்தான் முக்கிய வீரர்; காரணத்தைக் கூறும் கம்பீர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், ஸ்ரேயாஸ் ஐயரை 2023 உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் "மிகப்பெரிய கேம் சேஞ்சர்" என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Gautam Gambhir calls Shreyas Iyer key player for India in World Cup final Tamil News

ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பையின் ஒரே பதிப்பில் 500 ரன்களைத் தாண்டிய முதல் மிடில்-ஆர்டர் பேட்டர் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் படைத்தார்.

worldcup 2023 | gautam-gambhir | shreyas-iyer: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 19 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

Advertisment

கம்பீர் புகழாரம் 

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், ஸ்ரேயாஸ் ஐயரை 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் "மிகப்பெரிய கேம் சேஞ்சர்" என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார். காயத்திற்குப் பிறகு தனது இடத்திற்காக போராடுவதில் இருந்து நாக் -அவுட் போட்டியில் வெறும் 70 பந்துகளில் சதம் அடித்தது வரை அவரது குறிப்பிடத்தக்க ஆட்டத்தைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். 

இதுதொடர்பாக கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்த உலகக் கோப்பையில் எனக்கு மிகப்பெரிய கேம் சேஞ்சராக தெரிபவர் ஷ்ரேயாஸ் ஐயர்தான். அவர் காயமடைந்து தனது இடத்திற்காக போராட வேண்டியிருந்தது. ஆனால், அவர் தற்போது  நாக்- அவுட் போட்டியில் 70 பந்துகளில் சதம் அடித்தது மிகச்சிறப்பாக இருக்கிறார். மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா பந்துவீசும்போது இறுதிப் போட்டியில் அவர் இந்தியாவுக்கு முக்கிய வீரராக இருப்பார்." என்று கூறினார். 

கம்பீர் குறிப்பிடுவது போல் ஸ்ரேயாஸ் நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி மிரட்டி வருகிறார். குறிப்பாக சுழற்பந்துகளை அவர் சிக்சருக்கு பறக்கவிடும் விதம் பார்ப்பதற்கே கண்கொள்ள காட்சியாக இருக்கிறது. 

கடந்த புதன்கிழமை நியூசிலாந்துக்கு எதிராக நடந்த அரையிறுதிப் போட்டியில், 70 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 105 ரன்கள் குவித்து மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலம் ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பையின் ஒரே பதிப்பில் 500 ரன்களைத் தாண்டிய முதல் மிடில்-ஆர்டர் பேட்டர் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் படைத்தார். 

அவர் இந்த உலகக் கோப்பையில் இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்களுடன் மொத்தமாக 526 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அவரது சராசரி 75.14 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 113 எனவும் அபாரமான ஃபார்மில் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு இறுதிப் போட்டியிலும் ஸ்ரேயாஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்பலாம். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup Shreyas Iyer Gautam Gambhir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment