Dommaraju Gukesh at FIDE World Cup rankings Tamil News: அஜர்பைஜானின் தலைநகரம் பாகு-வில் நடந்த சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) உலகக் கோப்பை இரண்டாவது சுற்றில் மிஸ்ட்ராடின் இஸ்கண்ட்ரோவை வீழ்த்தினார். அதனால், உலக செஸ் வீரர்கள் தர வரிசைப் பட்டியலில் குகேஷ் 9-வது இடத்திற்கு முன்னேறினார். இதன்மூலம் தமிழக செஸ் வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக மாறியுள்ளார். மேலும், இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
9-வது இடத்தில் உள்ள குகேஷ் உலக தரவரிசை பட்டியலில் 2755.9 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இது லைவ் ரேட்டிங் ஆகும். விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 ரேட்டிங் உடன் உள்ளார். செப்டம்பர் 1-ம் தேதி அடுத்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், அதுவரை குகேஷ், ஆனந்தை விட தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்தால், 1986-க்கு பிறகு உலகத் தரவரிசையில் ஆனந்தை முந்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.
17 வயதான குகேஷ் சென்னையை சேர்ந்தவர். இந்திய கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான இவர் கடந்த 2019-ல் இந்த கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அவர் பெற்றார். 16 வயதில் உலக சாம்பியனை வீழ்த்தி சாதனை படைத்தார். மிக இளம் வயதில் 2750 லைவ் ரேட்டிங்கை எட்டிய வீரர் என்ற சாதனையை அண்மையில் படைத்தார். குகேஷுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தான் ரோல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
“கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, குகேஷ் என்னை மட்டுமல்ல, பலரையும் தனது திறமையை நம்ப வைத்துள்ளார். செஸ் போட்டிக்கான அவரது அர்ப்பணிப்புக்கு எல்லை இல்லை . அவர் வேலை செய்வதிலும், விளையாட்டைப் படிப்பதிலும் மிகவும் பிடிக்கும். அவர் விளையாட்டிற்கு ஒரு சிறந்த அணுகுமுறையைக் கொண்டு வருகிறார். அவருக்கு ஆற்றல் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால் இப்போது நான் அவரில் மேலும் மேலும் அவர் உச்சியில் இருக்க வேண்டிய கூறுகளைப் பார்க்கிறேன்: அணுகுமுறை, உறுதிப்பாடு, பரிசோதனை மற்றும் அபாயங்களை எடுக்க விருப்பம். அவர் மிகவும் தைரியமானவர், ”என்று ஆனந்த் FIDE உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு பாகுவிலிருந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil