சர்வதேச செஸ் அரங்கில் இந்திய கிராண்ட் மாஸ்டராக வலம் வருபவர் சென்னையை சேர்ந்த இளம் வீரர் குகேஷ்(18). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வாகை சூடி அசத்தி இருந்தார். அண்மையில் சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்ட உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலில் (கிளாசிக்கல்) குகேஷ் (2,787), 10 புள்ளிகள் அதிகரித்து 2 இடம் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Gukesh D visits Tirupati and has head tonsured as offering to Lord Balaji
இந்நிலையில், செஸ் சாம்பியன் குகேஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஏழுமலையானுக்கு மொட்டை போட்டு முடிகாணிக்கை செலுத்தி இருக்கிறார். தொடர்ந்து, சாமி தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கியுள்ளனர்.
இதன்பின்னர், கோயிலுக்கு வெளியே வந்த குகேஷ், ரசிகர்களுடன் போட்டோ எடுத்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், "நான் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டில் நிறைய முக்கியமான போட்டிகள் உள்ளன. எனவே நான் அதில் கவனம் செலுத்துகிறேன். நான் அனைத்து வடிவங்களிலும் முன்னேற விரும்புகிறேன், மேலும் கடவுள் அருளால், நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நம்புகிறேன்," என்று சமூக வலைதள பக்கத்தில் நார்வே செஸ் பகிர்ந்து கொண்ட வீடியோவில் கூறியிருக்கிறார்.
குகேஷ் ஏற்கனவே இந்த ஆண்டு 2025 டாடா ஸ்டீல் சாம்பியன்ஸ் மற்றும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் 2025 இல் பங்கேற்றுள்ளார். அதன் பிறகு அந்த டீனேஜர் ஸ்டாவஞ்சரில் நடைபெறும் மதிப்புமிக்க நார்வே செஸ் 2025 போட்டியில் விளையாடுவார். வெய் யியுடன், குகேஷ் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் அர்ஜுனை எதிர்கொள்ள இருக்கிறார். கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் குகேஷ் பங்கேற்கவில்லை.
திருப்பதி ஏழுமலையானுக்கு மக்கள் முடிகாணிக்கை கொடுப்பது ஏன்?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கள் தலைமுடியை தானம் செய்து வருவதற்கு தனித்துவமான பாரம்பரியம் உள்ளது. புராணக் கதையின்படி, திருப்பதியில் குடிகொண்டுள்ள ஏழுமலையான் குபேரரிடம் கடன் வாங்கி இருக்கிறார். அந்தக் கடனை அடைக்க, அவரது பக்தர்கள் தங்கள் தலைமுடியை தானம் செய்து வருகிறார்கள். முடியைக் காணிக்கையாக அளிப்பவர்களுக்கு அவர்கள் தானம் செய்த முடியை விட அதிக செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மற்றொரு பிரபலமான புராணக் கதை என்னவென்றால், திருப்பதி வாழ் ஏழுமலையானின் தெய்வத்தின் மீது எறும்புகள் மலையாக உருவாகும்போது, ஒரு பசு வந்து பால் கொடுக்கும். பசுவின் உரிமையாளர் இந்த செயலைக் கண்டறிந்ததும், அவர் வந்து கோடரியால் பசுவை அடிப்பார், இதனால், ஏழுமலையானுக்கு காயமடைந்து முடி உதிர்ந்து விடும். நீலா தேவி உடனடியாக உதவிக்கு வந்து தனது தலைமுடியை தானம் செய்வார். அதன் பிறகு ஏழுமலையான் ஈர்க்கப்படுவார். மேலும் முடி அழகின் முக்கிய பகுதியாக இருப்பதால், அதை தானம் செய்பவர் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவார் என்று நம்பப்படுகிறது.