21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த 218 வீரர், வீராங்கனைகள் பன்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக துவங்கப்பட்டது. இந்த காமன்வெல்த் போட்டிக்கு “கோல்ட் கோஸ்ட் 18” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காமல்வெல்த் போட்டிகள் இன்று காலை முதல் துவங்கியது. இதில் பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவில் இவர் வெள்ளி பதக்கம் வென்றார். இதில் மொத்தமாக 249 கிலோ பளுவை தூக்கி இரண்டாம் இடம் பிடித்தார். இதுவே இந்தியாவின் இந்த ஆண்டிற்கான முதல் பதக்கம்.
மேலும் இந்த பளுதூக்கும் போட்டியில், மலேசியாவைச் சேர்ந்த இஸார் அகமத் 261 கிலோ தூக்கி தங்கம் வென்றார். அடுத்தபடியாக வெள்ளியை இந்திய வீர வென்ற நிலையில், வெங்கலப் பதக்கத்தை இலங்கையைச் சேர்ந்த சத்துரங்க லக்மால் 248 கிலோ தூக்கி வென்றுள்ளார்.