இளம் வீரர் திலக் வர்மா அரை சதத்தை தட்டிப் பறித்த பாண்டியா: கேப்டன் செய்தது சரியா?

கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயலுக்காக அவரை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயலுக்காக அவரை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hardik Pandya denies Tilak Varma chance to hit fifty in 3rd T20I, Aakash Chopra Tamil News

ஹர்திக் பெரிய ஷாட்டை அடித்து போட்டியை முடித்தார். ஆனால், திலக் வர்மா 49 ரன்களில் இருந்தார்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Advertisment

திலக் வர்மா அரை சதத்தை தட்டிப் பறித்த பாண்டியா

இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை முடித்து வைத்தார். மேலும், திலக் வர்மா அரைசதம் விளாசும் வாய்ப்பில் மண்ணை அள்ளி போட்டார். இந்தியாவின் வெற்றிக்கு 2.1 ஓவர்களில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது, திலக் வர்மா 49 ரன்னுடன் மறுமுனையில் இருந்தார். அவர் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்ததால் திலக் வர்மாவின் அரைசதம் கனவு தகர்ந்தது.

இந்த செயலுக்காக கேப்டன் ஹர்திக் பாண்டியாவை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது குறித்து மீம்ஸ் போட்டுள்ள இணையவாசிகள், பரிதாபங்கள் சுதாகர் ஹர்திக்கை பார்த்து, “ஐயா நீங்க தோனி தான்னு நாங்க ஒத்துக்கிறோம். ஆனால் தயவு செஞ்சு இப்படிலாம் பண்ணாதீங்க” என்று சொல்வதாக போட்டுள்ளனர்.

Advertisment
Advertisements
publive-image

இதனிடையே, 3வது டி20யில் திலக் வர்மா அரைசதம் அடிக்க முடியாமல் போனது குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வருத்தம் தெரிவித்துள்ளார். இருதரப்பு தொடரில் நெட் ரன்ரேட் பற்றி கவலைப்பட தேவை இல்லாத நிலையில், ஹர்திக் பாண்டியா ஏன் பெரிய ஷாட் ஆட சென்றார் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வெறும் 44 பந்துகளில் 83 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவின் விக்கெட்டைப் பின்தொடர்ந்து நடுவில் நுழைந்த பிறகு, திலக் வர்மாவிடம் அதை நிதானமாக எடுத்துக்கொள்ளுமாறு ஹர்திக் பாண்டியா கூறியதாக ஆகாஷ் சோப்ரா எடுத்துரைத்தார். ஹர்திக் 15 பந்துகளில் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் 4-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தார்.

இந்தியா வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் 18வது ஓவரை தொடங்கியபோது, திலக் மற்றும் சூர்யகுமார் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மேன் பவலுக்கு எதிராக சிங்கிள்களை எடுத்தனர், ஹர்திக் பெரிய ஷாட்டை அடித்து போட்டியை முடித்தார். ஆனால், திலக் வர்மா 49 ரன்களில் இருந்தார்.

"ஹர்திக் பேட்டிங்கிற்கு வருகிறார்… இப்போது இது சுவாரஸ்யமானது. ஹர்திக் அவரிடம் நாட் அவுட்டாக இருப்பது முக்கியம், கேலி செய்யாதீர்கள் என்று கூறுகிறார். பிறகு ஹர்திக் பெரிய ஷாட்களை தானே ஆடுகிறார்… உங்களுக்கு என்.ஆர்.ஆர் (நெட் ரன்ரேட்) தேவையில்லை, அது' எந்த மாற்றமும் செய்யவில்லை. ஹார்திக் திலக்கை எளிதாக சிங்கிள் எடுக்க சொல்லி இருக்கலாம். ஆனால் பெரிய ஷாட்களை தாமே அடிக்க முயன்றார். உங்களுக்கு 13 பந்துகளில் 2 ரன்கள் தேவை. அவர் ஒரு சிங்கிள் எடுத்து திலக்கிடம் ஒரு ஸ்ட்ரைக் கொடுத்திருக்கலாம், அவர் ஒரு சிக்ஸரை அடித்திருக்கலாம்," என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Hardik Pandya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: