Ind vs Aus 4th Test Day 2 Live Cricket Score : சிட்னி டெஸ்டில் புஜாரா, ரிஷப் பாண்ட் அபார சதம் மற்றும் ஜடேஜாவில் துணையால் இந்திய அணி மெகா ஸ்கோரை எட்டியது. இந்த டெஸ்டிலும் தோற்கும் வாய்ப்பு இல்லை என்பதால், சரித்திரத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் அபார சாதனையை எதிர் நோக்கியிருக்கிறது.
சிட்னியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் தொடக்கத்தில், விஹாரி ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்துள்ளார் ரிஷப் பாண்ட்.
அவருடன் கை கோர்த்திருக்கும் புஜாரா தன்னுடைய நான்காவது இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
இன்று புஜாரா மற்றும் விஹாரி தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். நாதனின் பாலில் விஹார் வெளியேற ரிஷப் பாண்ட் புஜாராவுடன் கை கோர்த்துள்ளார். காலை 08:30 மணி நிலவரப்படி, களத்தில் புஜாரா 193 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ரவிந்திர ஜடேஜா களத்தில் உள்ளார்.
மேலும் படிக்க : நேற்றைய இந்தியாவின் ஆட்டம் பற்றி முழுமையான தகவல்களைப் படிக்க
ரிஷப் பாண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் பார்ட்னர்ஷிப் தற்போது 73 ரன்களை பெற்றுள்ளது. ரிஷப்பின் ஸ்கோர் 88 ரன்களாகும். ஜடேஜா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 491 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்துள்ளது இந்தியா.
இந்தியா மெகா ரன் குவிப்பு
புஜாரா அவுட் ஆனதைத் தொடர்ந்து ரிஷப் பாண்ட் - ரவீந்திர ஜடேஜா ஜோடி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு ‘தண்ணி’ காட்டியது. குறிப்பாக இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பாண்ட் சதம் அடித்து அசத்தினார்.
ஜடேஜா 114 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார். அப்போது இந்திய அணி 167.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் ஆட்டத்தை ‘டிக்ளேர்’ செய்வதாக விராட் கோலி அறிவித்தார்.
இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்ற ரிஷப் பாண்ட் 189 பந்துகளில் 159 ரன்கள் குவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இது. இந்த ஸ்கோரில் 15 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.
இந்திய அணியின் இந்த மெகா ஸ்கோரால் ஆஸ்திரேலிய வீரர்கள் மலைத்துப் போனார்கள். பின்னர் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் 2-ம் நாள் ஆட்ட முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 5 ரன்களுடனும், ஹாரிஸ் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நாளை (5-ம் தேதி) 3-ம் நாள் ஆட்டம் நடைபெறும். இந்திய அணி ஏற்கனவே 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த டெஸ்டிலும் தோற்கும் வாய்ப்பு இல்லை என்பதால், சரித்திரத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் அபார சாதனையை எதிர் நோக்கியிருக்கிறது.