Ind vs Aus 4th Test Day live score: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்டின் 3 ஆவது நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 83.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை எடுத்துள்ளது. இன்றைய ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தப்பட்டதால் நாளை அரை மணி நேரம் முன்பே தொடங்கவுள்ளது.
முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 2 - 1 என இந்திய அணி தொடரில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய (4.1.19) டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 622 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க வீரர் மாயன்க் அகர்வால் 77 ரன்களும், புஜாரா 193 ரன்களும் எடுத்தனர். இருவரும் இரட்டை சத்தை தவறவிட்டனர்.
Ind vs Aus 4th Test Day 3 Live score பரபரக்கும் சிட்னி களம்!
அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் இரண்டாவது டெஸ்ட் சதத்தை இந்த போட்டியில் எடுத்தார். அதன்படி 159 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஏழாவது விக்கெட்டாக ஜடேஜா 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து இந்திய அணி 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்தார்.
நான்கு போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் இருந்தது. நான்காவது டெஸ்டில் வெற்றி அல்லது டிரா பெற்றால் இந்தியா தொடரை வெல்லும் என்ற சூழலில், இந்தியா நான்காம் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 622 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா தொடரை உறுதியாக வெல்லும் என ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்
இந்நிலையில் இன்றைய (5.1.19) போட்டியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் உஸ்மான் கவாஜே மற்றும் மார்கஸ் ஹாரிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.21.6 ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வீரர் கவேஜா 27 ரன்களில ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து மார்னஸ் லாபஸ்சேஞ்ச் பேட்ஸ்மேனாக களமிறங்கினர்.
உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்திருந்த ஆஸ்திரேலியா அணி, உணவு இடைவேளைக்கு பின்பு விக்கெட்டுகளை இழந்து தடுமாற தொடங்கியது.
சதமடிப்பார் என்று எதிர்பார்க்க்கப்பட்ட துவக்க வீரர் ஹாரிஸ் 79 ரன்னில் ஜடேஜா பந்தில் போல்டாகி வெளியேறினார். ஷான் மார்ஷும் 8 ரன்னில் ஜடேஜா பந்தில் ரஹானே வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.தேநீர் இடைவேளைக்கு பின்பு 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது ஆஸ்தியேலியா. ஆட்டம் துவங்கிய முதல் ஓவரிலேயே 5 ரன்கள் எடுத்திருந்த டிம் பெய்ன், குல்தீப் யாதவ் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
பின்னர் ஹேண்ட்ஸ்கோம்பும் , கம்மின்ஸும் ஆட்டத்தைத் துவங்கி ஆடி வருகின்றனர். 83.3வது ஓவரின் போது வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தற்போது ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. இந்திய அணியை விட முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 386 ரன்கள் பின் தங்கி இருந்த நிலையில் களத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஹாரீஸ் மற்றும் லாபஸ்சேஞ்ச் ஒன்று சேர்ந்த 50 ரன்களை குவித்தனர்.
79 ரன்கள் எடுத்திருந்த ஹாரீஸ் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்பு வந்த ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்நிலையில் சிட்னி களத்தின் மீது மழையின் பார்வை விழுந்தது. போதிய வெளிச்சமும் இல்லாமல் போனது.
இதனால் ஆட்டம் பாதிலேயே தடைப்பட்டது. 3 ஆவது நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 83.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை எடுத்துள்ளது. நாளை அரை மணி நேரம் முன்பே ஆட்டம் தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்தியாவை விட 386 ரன்கள் பின் தங்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.