IND vs BAN Highlights: பவுலிங்கில் ஷமி; பேட்டிங்கில் கில்... வங்கதேசத்தை ஊதித் தள்ளிய இந்தியா!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் 2-வது போட்டியில் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ள இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs BAN champions trophy 2025 2nd match live score india vs bangladesh live cricket scorecard updates dubai international cricket stadium Tamil News

இந்தியா vs வங்கதேசம், லைவ் கிரிக்கெட் ஸ்கோர், சாம்பியன்ஸ் டிராபி 2025

 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று வியாழக்கிழமை  பிற்பகல் 2:30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்  தொடங்கி நடந்து வரும்  2-வது போட்டியில் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ள இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதி  வருகின்றன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh LIVE Cricket Score, Champions Trophy 2025

டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் - இந்தியா பவுலிங் 

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் ஆட களம் புகுந்த தன்சித் ஹசன் - சௌம்யா சர்க்கார் ஜோடியில், முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சௌம்யா சர்க்கார் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அவருக்குப் பின் வந்த  கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஹர்ஷித் ராணா வீசிய 1.4-வது ஓவரில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். 

Advertisment
Advertisements

இதன்பிறகு வந்த மெஹிதி ஹசன் மிராஸ் உடன் களத்தில் இருந்த தன்சித் ஹசன் ஜோடி அமைத்தார். இதில் ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி 5 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் மிராஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் தாக்குப் பிடித்து 4 பவுண்டரிகளை விரட்டி இருந்த தொடக்க வீரர் தன்சித் ஹசன் அக்சர் படேல் வீசிய 8.2-வது ஓவரில் கீப்பர் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

அவருக்குப்  பின் வந்த முஷ்பிகுர் ரஹீம் அக்சர் படேல் வீசிய அடுத்த பந்தில் கீப்பர் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இன்னும் ஒரு விக்கெட்டை எடுத்தால் அக்சர் படேல் ஹாட்ரிக் விக்கெட் பெறலாம் என்கிற சூழல் நிலவியது. அப்போது, களத்தில் இருந்த தவ்ஹித் ஹ்ரிடோய்  உடன் ஜாக்கர் அலி ஜோடி அமைத்தார். 

இதில், ஜாக்கர் அலி அக்சர் வீசிய 8.4-வது பந்தை எதிர்கொண்டார். பந்தை தடுத்து ஆட அவர் முயன்ற நிலையில், பந்து அவுட்-சைடு எட்ஜ் ஆகி கீப்பருக்கு அருகில் முதல் ஸ்லிப் திசையில் கேப்டன் ரோகித்தை நோக்கி பறந்து வந்தது. ஏறக்குறைய ரோகித்தின் கைக்குப் பந்து வந்த நிலையில், அவர் பந்தைப் பிடிக்க தடுமாறி கேட்சை கோட்டை விட்டார். 

இதன் காரணமாக அக்சர் படேல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது. கேட்சை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் ரோகித் தனது வலது கையால் தரையைப் போட்டு நான்கைந்து முறை தட்டினார். மேலும், கேட்சை தவற விட்டதற்கு அக்சர் படேலிடம் மன்னிப்பு கோரினார். 

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறிய நிலையில், இதன்பிறகு களத்தில் இருந்த தவுஹித் ஹிரிடோய் - ஜேக்கர் அலி ஜோடி அணியின் விக்கெட் சரிவை மீட்டு எடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினர். இவர்களது ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்து அசத்தியது. நிதானமாக ஆடி அரைசதம் அடித்த ஜேக்கர் அலி, 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் தனது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹிரிடாய், 114 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் சதமடித்து அசத்தினார். இறுதியில் வங்கதேச அணி, 49.4 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்து. இந்திய அணி இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசி முகமது சமி  5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டையும், அக்சர் பட்டேல் 2 வெக்கேடியும் வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங்

.இதையடுத்து, இந்திய அணி 229 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த களமாடியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி அதிரடியாக விளையாடினார். இதில், 7 பவுண்டரிகளை விரட்டிய ரோகித் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோலி 22 ரன்னுக்கும், அவருக்குப் பின் வந்த  ஸ்ரேயாஸ் அய்யர் 15 ரன்னுக்கும் அவுட் ஆகி வெளியேறினர். 

இதன்பிறகு வந்த அக்சர் படேல் 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த வந்த கே.எல் ராகுலுடன் தொடக்க வீரர் கில் ஜோடி அமைத்தார். நிதானம் கலந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் 124 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்திய அணியின் வெற்றிக்கு 22 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது  சிக்ஸர் ஆட்டத்தை முடித்து வைத்தார் ராகுல். 

ஒருபுறம் விக்கெட் சரிவு இருந்தாலும், மறுபுறம் தொடக்கம் முதல் நங்கூரம் போட்டு தனது சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தினார் கில். கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த கில் 129 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்தார். இறுதியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. 

அடுத்ததாக இந்தியா அதன் 2-வது போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளரான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. 

இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: 

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக்  பாண்ட்யா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ்.

வங்கதேசம்: தன்சித் ஹசன், சௌம்யா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நேற்று புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh LIVE Cricket Score, Champions Trophy 2025

முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால்,  ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும். 

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று கராச்சியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

 

 

India Vs Bangladesh Champions Trophy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: