Advertisment

IND vs ENG, 3rd Test: கையில் கருப்பு பட்டை அணிந்த இந்திய வீரர்கள்... காரணம் இதுதான்!

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணி விளையாடி வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
IND vs ENG 3rd Test Why Indian players are wearing black armbands Tamil News

தத்தாஜிராவ் கெய்க்வாட் 1952 மற்றும் 1961 க்கு இடையில் இந்தியாவுக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Indian Cricket Team | India vs England 3rd Test Rajkot: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 455 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

Advertisment

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 131 ரன்களையும், ஜடேஜா 112 ரன்களையும், சர்ஃபராஸ் கான் 62 ரன்களையும் எடுத்தனர்.  இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள், ரெஹன் அகமது 2 விக்கெட்டுகள், ஆண்டர்சன் , ஹார்ட்லி, ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

தொடர்ந்து முதல் இனிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 238 ரன்கள் பின்தங்கியுள்ளது. சதம் அடித்து மிரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 133 ரன்னுடனும், ரூட் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை - காரணம்

இந்நிலையில், ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணி விளையாடி வருகிறார்கள். இந்த வார தொடக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாட் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகிறார்கள். 

"சமீபத்தில் காலமான இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட்டின் நினைவாக, இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள்" பி.சி.சி.ஐ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

தத்தாஜிராவ் கெய்க்வாட் வயது தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். இவர் 1952 மற்றும் 1961 க்கு இடையில் இந்தியாவுக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், 1959 இல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார்.

வலது கை ஆட்டக்காரரான அவர் 1952 இல் லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார் மற்றும் அவரது கடைசி சர்வதேச ஆட்டம் 1961 இல் சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக இருந்தது. 

ரஞ்சி டிராபியில், கெய்க்வாட் 1947 முதல் 1961 வரை பரோடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் 14 சதங்கள் உட்பட 47.56 சராசரியில் 3,139 ரன்கள் எடுத்தார். 1959-60 சீசனில் மகாராஷ்டிராவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 249 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்சமாகும்.

தத்தாஜிராவ் கெய்க்வாட் முன்னாள் இந்திய தொடக்க வீரரும், தேசிய அணி பயிற்சியாளருமான அவுன்ஷுமான் கெய்க்வாட்டின் தந்தை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment