/indian-express-tamil/media/media_files/2025/07/31/ind-vs-eng-india-vs-england-5th-test-live-cricket-score-updates-shubman-gill-ollie-pope-kennington-oval-london-tamil-news-2025-07-31-16-05-05.jpg)
இங்கிலாந்து vs இந்தியா, 5வது டெஸ்ட் கென்னிங்டன் ஓவல், லண்டன்.
இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ளது. லீட்சில் நடந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இதனைத் தொடர்ந்து லண்டனில் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பின்னர் மான்செஸ்டரில் நடந்த 4-வது போட்டி டிரா ஆனா நிலையில், தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் வியாழக்கிழமை (ஜூலை 31) முதல் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடக்கிறது.
முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் - இந்தியா முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல் ராகுல் களம் புகுந்தனர். இதில் 2 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார் ஜெய்ஸ்வால். ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 14 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, களத்தில் இருந்த கேப்டன் சுப்மன் கில் - சாய் சுதர்சன் ஜோடியில், கேப்டன் கில் 21 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 9 ரன்களுக்கும், துருவ் ஜொரேல் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 153 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் கருண் நாயருடன் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தார். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து அணி மேற்கொண்ட முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.
முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. அரைசதம் கடந்த கருண் நாயர் 52 ரன்களுடனும், வாஷிங்டன் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணியில் டங், அட்கிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
2-வது நாள் ஆட்டம் - இந்திய அணி பேட்டிங்
வெள்ளிக்கிழமை 2-ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில், களத்தில் இருந்த கருண் நாயர் - வாஷிங்டன் சுந்தர் ஜோடியில் கருண் 57 ரன்னுக்கும், வாஷிங்டன் 26 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்த வந்த வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினர். இதனால், 69.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 224 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டையும், ஜோஷ் டங்கு 3 விக்கெட்டையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி
தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், முதல் விக்கெட் சரிந்தபின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனாலும் இந்திய அணியை விட, முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அரைசதம் கடந்த க்ரௌலி 64 ரன்களும், புரூக் 53 ரன்களும், டங்கெட் 43 ரன்களும், ரூட் 29 ரன்களும், ஒல்லி போப் 22 ரன்களும், எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்திய அணி பேட்டிங்
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல், 28 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் 29 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகாஷ் தீப் முதல் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில், 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு, 75 ரன்கள் எடுத்து 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால், 49 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
3-வது நாள் ஆட்டம் - இந்திய அணி பேட்டிங்
சனிக்கிழமை 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. களத்தில் இருந்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஆகாஷ் தீப் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஜெய்ஸ்வால் ஏற்கனவே அரைசதம் அடித்த நிலையில், ஆகாஷ் தீப் தனது பங்கிற்கு அரைசதம் அடித்து மிரட்டினார். இதன் மூலம், 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு நைட் வாட்ச்மேனாக களம் புகுந்து அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார். முதல் வீரராக 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக 84 ரன்கள் எடுத்த அமித் மிஸ்ரா இருக்கிறார்.
மறுமுனையில் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்திய நிலையில், அகாஷ் தீப் 66 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கில் 11, கருண் நாயர் 17, ஆகியோர் சீரான இடைவெளியில் வீழ்ந்த நிலையில், 118 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால், அணியின் ஸ்கோர் 273 ரன்களை கடந்தபோது ஆட்டமிழந்தார். இதன்பிறகு, 7-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜடேஜா – துருவ் ஜொரேல் ஜோடி அசத்தலாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தபோது ஜெரேல் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சில நிமிடங்களில் அரைசதம் கடந்த ஜடேஜா 53 ரன்களில் வீழ்ந்தார். 9-வது விக்கெட்டுக்கு வந்த சிராஜ் ரன் கணக்கை தொடங்காமலே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 357 ரன்களுக்கு இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 10-வது விக்கெட்டுக்கு பிரசித் கிருஷ்ணாவுடன் இணைந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியில் இறங்கினார்.
இதன் காரணமாக இந்திய அணி 400 ரன்களை நோக்கி வேகமாக முன்னேறிய நிலையில், சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி அரைசதம் கடந்த வாஷிங்டன், 46 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 396 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டங் 5 விக்கெட்டுகளும், அட்கின்சன் 3 விக்கெட்டுகளும், ஓவர்டென் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
4-வது நாள் ஆட்டம் - இங்கிலாந்து பேட்டிங்
முதல் இன்னிங்சில் 23 ரன்கள் முன்னிலை பெற்றதால், 374 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு, 50 ரன்கள் எடுத்தது, கரௌலி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஒல்லி போப் சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய நிலையில், 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமனையில் அரைசதம் கடந்த டன்கெட் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோரூட் – ஹேரி புருக் ஜோடி சிறப்பாக விளையாடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் அதிகரித்து வெற்றியை நோக்கி முன்னேறியது.
இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில் இவர்களை பிரிக்க இந்திய அணி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு விரைவில் பலன் கிடைக்கவில்லை. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த நிலையில், சதம் கடந்த புரூக் 111 (98 பந்து) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த பெத்தேல் 5 ரன்களிலும், சதம் கடந்த ரூட் 105 ரன்களிலும் வெளியேறிய நிலையில், இங்கிலாந்து அணி 339 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கிலாந்து அணி 339 ரன்கள் குவித்த நிலையில், வெற்றிக்கு இன்னும் 35 ரன்களே தேவை. கைவசம் 4 விக்கெட்டுகள் இருப்பதால், இந்திய அணி இந்த போட்டியை வெற்றியுடன் முடிக்க இந்த 4 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
5-வது நாள் ஆட்டம்
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இரு அணிகளும் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகாமையில் இருந்த சூழலில், ஆரம்பம் முதல் போட்டி அனல் பறந்தது. இந்திய பவுலர்கள் சரமாரி பந்து வீச்சு தாக்குதல் தொடுத்தனர். களத்தில் இருந்த ஜேமி ஸ்மித் - ஜேமி ஓவர்டன் ஜோடியில், சிராஜ் வீசிய பந்தில் ஜேமி ஸ்மித் 2 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து இணைந்த ஜேமி ஓவர்டன் - ஜோஷ் டங்கு ஜோடியில், ஜேமி ஓவர்டன் 9 ரன்னுக்கு அவுட் ஆகி நடையைக் கட்டினார். அடுத்து இணைந்த ஜோஷ் டங்கு - கஸ் அட்கின்சன் ஜோடியில், ஜோஷ் டங்கு ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இங்கிலாந்து வசம் ஒரு விக்கெட் மட்டுமே இருக்க, கஸ் அட்கின்சன் - கிறிஸ் வோக்ஸ் ஜோடி அமைத்தனர். இந்த ஜோடியில் சிராஜ் வீசிய 83.2-வது ஓவரில் கஸ் அட்கின்சன் சிக்ஸரை பறக்கவிட்ட மிரட்டினார். இதனால், அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இருப்பினும், சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்து கஸ் அட்கின்சனுக்கு பின்புறம் இருந்த ஸ்டம்பை பதம் பார்க்கவே, இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 85.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்த இங்கிலாந்து 367 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 -2 என்கிற கணக்கில் சமன் செய்துள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டியில் தங்களது சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இரு அணி பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அன்ஷுல் கம்போஜ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: சாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்கு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.