இந்தியா, தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்களுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கேப் டவுனில் நடந்து வருகிறது.
முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. தொடரை யார் கைப்பற்றுவது என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது டி20 போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் அதிரடி காட்டினர். ஓரே ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த ரோஹித் சர்மா, அடுத்த ஓவரில் எல்.பி.டப்ள்யூவானார்.
அடுத்து களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா, சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார்.
இந்திய அணி மூன்று ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்களுடன் விளையாடி வருகிறது. போட்டியின் லைவ் ஸ்கோர் அறிய ஐஇதமிழுடன் இணைந்து இருங்கள்.
8 ஒவர் முடிவில் இந்திய அணி 65 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.