Advertisment

கடும் குளிர், மழைப் பொழிவுக்கு வாய்ப்பு: தர்மசாலா ஆடுகளம் தயாரிப்பில் இந்தியாவுக்கு சவால்கள்

தர்மசாலா ஆடுகளமும் கருப்பு மண்ணால் ஆனது என்பதால், மெதுவான மேற்பரப்பை உருவாக்குவது பிரச்சினையாக இருக்காது. ஆனால் ஆடுகளம் தக்கவைக்கும் ஈரப்பதத்தின் அளவு முக்கியமானது.

author-image
WebDesk
New Update
India challenge to make rainy chilly Dharamsala non English pitch Tamil News

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மார்ச் 7 ஆம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs England, 5th Test, Dharamsala: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. 

Advertisment

இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மார்ச் 7 ஆம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 

தர்மசாலா மைதானமானது இமயமலை அடிவாரத்தில் உள்ளது. தற்போது அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. போட்டி நடைபெறும் நாளில் மழைப்பொழிவுக்கும் வாய்ப்புள்ளது. இதனால், ஆடுகளத்தில் ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியமான காரணியாக மாற்றியுள்ளது.  ஆடுகளத்தில் அதிக ஈரப்பதம் இருந்தால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும். எனவே,  ஆடுகளத்தை மைதான ஊழியர்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் இடையே ஒன்பது நாட்கள்  இடைவெளி இருந்த நிலையி, தர்மசாலாவுக்கான ஆடுகளம் தயாரிப்புகள் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கி விட்டது. தற்போது அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையை மனதில் கொண்டு இந்திய அணி நிர்வாகம் இப்போதே ஆடுகளம் தயாரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. 

தர்மசாலா சூழல் மற்றும் வானிலை ஆகியவை இந்தியாவை விட இங்கிலாந்துக்கு அவர்களின் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற சாதகத்தை உருவாக்கும். அதனால், ஆடுகளம் இந்திய அணி விருப்பும் ஆடுகளம் போல் தயாரிக்கப்பட உள்ளது. 

"இது அனைத்தும் ஈரப்பதத்தின் அளவைப் பொறுத்தது. அது உயரமான பக்கத்தில் இருந்தால், அது சீமர்களுக்கு உதவும். இயற்கை நிலைமைகள் நிச்சயமாக அதிக ஈரப்பதத்தைக் கொண்டுவரும் என்பதால், முன்கூட்டியே தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும். டெஸ்டுக்கு 10 நாட்களுக்கு முன்பு தொடங்குவதற்கு பதிலாக, 15-20 நாட்களுக்கு முன்னதாகவே வேலை தொடங்கியுள்ளது. ஆடுகளம் எப்படி நடந்து கொள்கிறது என்பதையும், அதற்கேற்ப மைதான ஊழியர்கள் தயார் செய்ய முடியும் என்பதையும் இது அனைவருக்கும் உணர்த்தும். மேல்நிலை நிலைமைகள் காரணமாக ஆடுகளத்தில் மூமெண்ட் இருக்கலாம். ஆனால் ஆடுகளத்திற்கு வெளியே சீம் மூமெண்ட் இருக்காது, ”என்று தர்மசாலா கிரிக்கெட் வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளன. 

தர்மசாலாவைப் பொறுத்தவரை, அங்கு வானிலை மிக முக்கிய காரணியாகும். வானிலை முன்னறிவிப்பின்படி, இந்த போட்டிக்கு முன்னதாக, நகரின் பகல் நேர வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு வெப்பநிலை சுமார் 7 டிகிரி செல்சியசாக இருக்கும். போட்டி நாட்களில் மழைப் பொழிவுக்கும் வாய்ப்புள்ளது. 

ஆடுகளமும் கருப்பு மண்ணால் ஆனது என்பதால், மெதுவான மேற்பரப்பை உருவாக்குவது பிரச்சினையாக இருக்காது. ஆனால் ஆடுகளம் தக்கவைக்கும் ஈரப்பதத்தின் அளவு முக்கியமானது.

ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டியில், மூடுபனி காரணமாக, குளிர்காலத்தின் இறுதியில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதால், முதல் அமர்வில் நல்ல ஈரப்பதம் இருந்தது. மேலும் மதியம் வெயில் கடுமையாக இருந்ததால், இந்தியாவின் வேண்டுகோளின் பேரில், மைதான ஊழியர்கள் ஆடுகளத்தை மூடுவதற்கு தார்ப்பாயிக்கு பதிலாக சாக்கு துணியை மட்டுமே பயன்படுத்தினர். இதனால் ஈரப்பதம் ஆவியாகி வியர்வை வெளியேற்றியது. 

தர்மசாலாவில், குறைந்த வெப்பநிலை காரணமாக ஈரப்பதம் நீண்ட நேரம் இருக்கும் என்பதால், ஆடுகளத்தின் மீது தண்ணீர் தெளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அது உயரமான பக்கத்தில் இருந்தால், ஆடுகளம் உடைந்து போவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்பதால், மைதான ஊழியர்கள் அதற்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிடுவார்கள்.

"இது குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், அது சூரியனுக்குக் கீழே நொறுங்குவதைப் பற்றியும், விரிசல்கள் திறக்கப்படுவதைப் பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. டெஸ்டுக்கு முன், வெப்பநிலை ஒரே மாதிரியாக (13-15 டிகிரி செல்சியஸ்) இருந்தால், மைதான ஊழியர்களும் பிட்ச்சை சூரியனுக்குக் வெளிச்சத்தில் காய அனுமதிக்கலாம் மற்றும் ஈரப்பதத்தின் அளவைக் குறைக்கலாம்," என்று அதிகாரி ஒருவர் கூறினார். 

மெதுவான ஆடுகளங்கள்

இந்த தொடரில் இதுவரை, இந்தியா பாரம்பரிய மெதுவான ஆடுகளங்களில் விளையாட விரும்புகிறது. இது டெஸ்ட் முன்னேறும்போது திருப்பத்தை வழங்கியது. இருப்பினும், ராஞ்சியில் நிலைமைகள் குறித்து இந்தியா அதிருப்தி அடைந்தது. அங்கு 2 வது நாளில் இருந்து பந்து குறைவாக திரும்பத் தொடங்கியது, கடைசி நாளில் அது மிகவும் சவாலானது.

இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் சதவீதத்தில் முன்னேற இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியம். புள்ளிகள் பட்டியலில் தற்போது இந்தியா 64.58 % சதவீதத்துடன் அதே 2வது இடத்தில் நீடிக்கிறது. முதல் இடத்தில் (75%) நியூசிலாந்து அணி உள்ளது. 3வது மற்றும் 4வது இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (55%), வங்கதேசம் (50%) அணிகள் உள்ளன. 

எனவே, இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல ஆர்வமாக உள்ளது. அதனால் தான் ஆடுகளத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India versus England: India’s challenge to make rainy, chilly Dharamsala non-English

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

India Vs England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment