2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டியாக (50 ஓவர்) கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் அரங்கேறும் இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India not to travel to Pakistan for Champions Trophy, wants its matches in Dubai
இரு நாடுகளுக்கு இடையே நிகழும் அரசியல் பதற்றம் காரணமாக, இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
"இதுதான் எங்கள் நிலைப்பாடு. அதை மாற்ற எந்த காரணமும் இல்லை. நாங்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி எங்களுக்கான போட்டிகளை துபாய்க்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டோம்." என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். "அரசுடன் கலந்தாலோசித்து" பாகிஸ்தான் செல்வது குறித்தான தங்களது நிலைப்பாட்டில் பி.சி.சி.ஐ தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் விஷயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்த நிலையில், அங்கு சென்ற விளையாட இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்த போதிலும், இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் இலங்கைக்கு மாற்ற வைத்தது பி.சி.சி.ஐ.
கடந்த மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தையொட்டி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முஹம்மது இஷாக் டார் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நடந்த முதல் நேரடி உரையாடல் இதுவாகும்.
இந்த சுமூகமான சந்திப்பிற்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் உறவுகள் மீண்டும் தொடங்கும் என்று ஊகிக்கப்பட்டது. பி.சி.பி தலைவரான பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வியும் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல், சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல இருப்பதாக தூதரக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூட இந்தியாவை எல்லை தாண்டி பயணம் செய்யும்படி நம்ப வைக்க பின்னோக்கி வளைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் தங்கள் அணி இந்தியாவுக்குத் திரும்புவதற்கான விருப்பத்தை பாகிஸ்தான் வாரியம் பி.சி.சி.ஐ-க்கு வழங்கியது. வரும் நாட்களில் இரண்டு வாரியங்களும் மீண்டும் தங்கள் இழுபறியை மீண்டும் தொடங்கும் என்பதால் எதுவும் செயல்படவில்லை.
சமீபத்தில் இங்கிலாந்து, வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிரான சர்வதேச போட்டிகளை சொந்த மண்ணில் பாகிஸ்தான் நடத்தியது. இந்தியா கடைசியாக 2008 ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“