இங்கி,. - ஆஸி.,-க்கு ஆப்பு வைத்த ஐ.சி.சி… WTC பட்டியலில் தட்டித் தூக்கிய இந்தியா, பாக்,. அணிகள்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் அபராத புள்ளிகள் பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு கூடுதல் நன்மையாக அமைந்துவிட்டது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் அபராத புள்ளிகள் பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு கூடுதல் நன்மையாக அமைந்துவிட்டது.
ஐ.சி.சி.யின் திருத்தப்பட்ட புதிய விதிப்படி, தாமதமாக பந்து வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஒரு புள்ளி கழிக்கப்படும்.
World Test Championship (2023-2025) Points table Tamil News: இங்கிலாந்து மண்ணில்நடந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இரு அணியினரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காமல் தாமதப்படுத்தியதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கண்டறிந்துள்ளது. அதனால், இரு அணிக்கும் அபராதத் தொகை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அபராதப் புள்ளிகளை ஐ.சி.சி விதித்துள்ளது.
Advertisment
இங்கிலாந்து அணி 5 டெஸ்டுகளில் 4-ல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் மட்டும் 9 ஓவர்களை வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்து இருக்கிறார்கள். மொத்தத்தில் அந்த அணி 4 டெஸ்டையும் சேர்த்து 19 ஓவர்கள் தாமதமாக வீசியிருக்கிறது. இதே போல் ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் இந்த தவறை செய்திருக்கிறது. அந்த அணி மான்செஸ்டரில் மழையால் டிராவில் முடிந்த 4-வது டெஸ்டில் மட்டும் 10 ஓவர்கள் மெதுவாக வீசியிருக்கிறது.
அபராத புள்ளிகள்
Advertisment
Advertisements
ஐ.சி.சி.யின் திருத்தப்பட்ட புதிய விதிப்படி, தாமதமாக பந்து வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஒரு புள்ளி கழிக்கப்படும். அத்துடன் ஒரு ஓவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து அணிக்கு 5 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும். அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 28 புள்ளிகள் சேர்த்து இருந்த இங்கிலாந்து அணி 19 புள்ளிகளை அபராதமாக இழந்து, இப்போது அதன் புள்ளி எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது.
இதே போல் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி 28-ல் இருந்து 18- ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 100 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 30 சதவீத புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 15 சதவீத புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
முன்னிலையில் இந்தியா - பாக்,. அணிகள்
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் அபராத புள்ளிகள் பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு கூடுதல் நன்மையாக அமைந்துவிட்டது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 100 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா 30 சதவீத புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 15 சதவீத புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
கவாஜா அதிருப்தி
ஐ.சி.சி.யின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது டிவிட்டர் பக்கத்தில், 'மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்டில் இரு நாட்கள் பெய்த மழை காரணமாக 2-வது இன்னிங்சில் எங்களுக்கு பந்து வீச கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் ஐ.சி.சி., பந்துவீச்சில் தாமதம் செய்ததாக கூறி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து 10 புள்ளிகளை எங்களிடம் இருந்து பறித்துள்ளது. இது எப்படி நியாயமானது என்று தெரியவில்லை' என்று பதிவிட்டுள்ளார்.
Don't even get the chance to bowl in the second innings at Manchester due to 2 days of rain and @ICC still issue fines and take 10 WTC points of us for slow over rates! That makes a lot of sense... 🤦🏾♂️ pic.twitter.com/NKuGI61n2n