பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

முத்தரப்பு டி20 இறுதி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.

முத்தரப்பு டி20 இறுதி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

இந்தியா, வங்கதேசம் இடையே கொழும்புவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 இறுதி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.

Advertisment

டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. சபீர் ரஹ்மான் அதிகபட்சமாக 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் சாஹல் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதிக் கட்டத்தில் 8 பந்துகளில் 29 விளாசிய தினேஷ் கார்த்திக், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து  இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தார்.

Rohit Sharma

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: