இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான முதல் மற்றும் 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England LIVE Cricket Score, 3rd ODI
இந்தியா - இங்கிலாந்து இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரா வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் - இந்தியா பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் போடுவதாக அறிவித்தார். இதையடுத்து, ரோகித் தலைமையிலான இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது.இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடியில் ரோகித் ஒரு ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். அடுத்த வந்த விராட் கோலி களத்தில் இருந்த சுப்மன் கில்லுடன் ஜோடி அமைத்தார்.
இந்த ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதேபோல், ரன் சேர்க்க போராடி வந்த கோலி அரைசதம் அடித்து 52 ரன்களுக்கு அவுட் ஆனார் . அவருக்குப் பின் வந்த ஸ்ரேயாசும் தனது பங்கிற்கு சிறப்பாக மட்டையைச் சுழற்றினார். சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டி எதிரணிக்கு குடைச்சல் கொடுத்தார்.
இதனால், ஸ்ரேயாஸ் - சுப்மன் கில் ஜோடியை உடைக்க இங்கிலாந்து பவுலர்கள் போராடினர். இந்த ஜோடியில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் விளாசினார் கில். அவர் 102 பந்துகளில் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்து சிறப்பாக இருந்த ஸ்ரேயாஸ் 78 ரன்னில் அவுட் ஆக்கினார்.
தொடர்ந்து வந்த வீரர்களில், ராகுல் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ஹர்த்திக் பாண்ட்யா 17 ரன்னிலும், அக்சர் படேல் 13 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ராகுல் 29 பந்தில் 40 ரன் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட், பென் டக்கெட் களமிறன்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். பென் டக்கெட் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, டாம் பெண்ட்டன் வந்து சால்ட் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. ஆனால், பில் சால்ட், 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் பந்தில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோ ரூட் நிதானாக விளையாடினார். டாம் பெண்ட்டன் 38 ரன்கள் எடுத்திருந்தபோது, குல்தீப் யாதவ் பந்தில் கே.எல். ராகுல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதற்கு அடுத்து வந்த வீரர்களில் கஸ் அட்கின்சன் தவிர மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்ட முடியாமல் தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து: பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), டாம் பான்டன், லியாம் லிவிங்ஸ்டோன், கஸ் அட்கின்சன், அடில் ரஷித், மார்க் வூட், சாகிப் மஹ்மூத்.