சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த 5 போட்டிகளும் கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. குறிப்பாக, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி வரும் 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த டி20 போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் ஜனவரி 12-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட் விலைகள் ரூ. 1500-ல் இருந்து ரூ. 15 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிக்கெட்டுகளை ஜோமட்டோ நிறுவனத்தின் District செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.