/indian-express-tamil/media/media_files/2025/01/10/vVxbtteGsLhU0wKXzVmw.jpg)
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த 5 போட்டிகளும் கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. குறிப்பாக, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி வரும் 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த டி20 போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் ஜனவரி 12-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட் விலைகள் ரூ. 1500-ல் இருந்து ரூ. 15 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிக்கெட்டுகளை ஜோமட்டோ நிறுவனத்தின் District செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.