/indian-express-tamil/media/media_files/2025/01/25/a3EK4Hs2oAiBM9lCtLsU.jpg)
டி20 போட்டி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தை சுற்றி போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (ஜி.சி.டி.பி) அறிவித்துள்ளது.
பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றுப்பாதைகள் அமலில் இருக்கும் என்று ஜி.சி.டி.பி.யின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் (கெனால் சாலை), பாரதி சாலை வழியாக மட்டுமே நுழைவு அனுமதிக்கப்படும், வாலாஜா சாலையிலிருந்து நுழைய அனுமதி இல்லை.
பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இருக்கும், பாரதி சாலையில் இருந்து மட்டுமே வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் சாலைக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பாரதி சாலையில், ரத்னா கஃபேயில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.
வாகன நிறுத்த அனுமதி இல்லாதவர்களுக்கு கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம், பெருந்திரள் துரித இரயில் போக்குவரத்துத் திட்ட சேப்பாக்கம் இரயில் நிலையம், சேப்பாக்கம் பொதுப்பணித்துறை மைதானம் மற்றும் சுவாமி சிவானந்தம் சாலை ஆகிய இடங்களில் மாற்று வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் காமராஜர் சாலையில் (நேப்பியர் பாலம் முதல் கண்ணகி சிலை வரை) வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.