IND vs SA 2nd ODI: தென் ஆ.,-வுக்கு காத்திருக்கும் ஆபத்து... கெபேஹா பிட்ச் ரிப்போர்ட்!

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

author-image
WebDesk
New Update
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி: பிட்ச் மற்றும் வானிலை ரிப்போர்ட்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி: பிட்ச் மற்றும் வானிலை ரிப்போர்ட்

india-vs-south-africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி  3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

Advertisment

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

கெபேஹா ஆடுகளம் எப்படி?

இன்றைய போட்டி நடக்கும் கெபேஹா பிட்ச் (ஆடுகளம்) மெதுவான தன்மை கொண்டது என்பதால் அதிக ஸ்கோரை எதிர்பார்க்க முடியாது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment
Advertisements

இருப்பினும், சமீப காலமாக கெபேஹா பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு பவுன்ஸ் இருக்காது என்பதால் வேகப் பந்துவீச்சாளர்கள் சிரமப்படுவார்கள். 

இந்த பிட்ச்-சில் தென் ஆப்பிரிக்க அணி அதிக வெற்றிகளை பெற்று இருந்தாலும், அந்தஅணி பெற்ற தோல்விகள் இரண்டுமே ஆசிய அணிகளுக்கு எதிராக வந்தவை ஆகும். சுழற்பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா சுருண்டது. தற்போதுள்ள அணியும் சுழலுக்கு எதிராக அனுபவம் குறைவாக உள்ளது. அதனால், 50 ஓவர்கள் தாக்குப் பிடித்து ஆடுவது கடினம். 

சமீபத்தில் இதே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 15 ஓவர்களில் 154 ரன்களை சேஸிங் செய்து இருந்தது. அந்தப் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் பந்து ஈரமாக மாறியதே இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. ஆனால், இன்றைய போட்டியில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் பட்சத்தில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா போன்றோர் சுழல் வித்தை காட்டி மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். 

வானிலை அறிக்கை 

கெபேஹா நகரில் 9 சதவீத மழைப்பொழிவு வாய்ப்புடன் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகலில் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும், இரவில் 15 டிகிரி செல்சியஸ் வரை குறையும். ஈரப்பதம் 64 சதவீதம் முதல் 93 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 15 கிமீ முதல் 30 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs South Africa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: