/tamil-ie/media/media_files/uploads/2018/02/a304.jpg)
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.
அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய விக்கெட் கீப்பராக ஹெய்ன்ரிச் கிளாசீன் என்பவரும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள லுங்கிசனி ங்கிடியும் முதல் முறையாக தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இப்போட்டியிலும் ரோஹித் ஷர்மா சொதப்பினார். 6 பந்துகளை சந்தித்த ரோஹித், ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் இன்சைட் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இந்த ஒருநாள் தொடரில் 20, 15, 0 என மொத்தம் மூன்று போட்டிகளில் 35 ரன்களே எடுத்துள்ளார். இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.
சிறப்பாக விளையாடிய தவான், கோலி பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது. தவான் 76 ரன்னில் வெளியேற, இந்திய கேப்டன் விராட் கோலி தனது 34வது ஒருநாள் சதத்தை விளாசினார். அதேசமயம், தோனி 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை ietamil.comல் உடனுக்குடன் நீங்கள் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.