c, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை பவுலிங்; இந்தியா முதலில் பேட்டிங்
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Sri Lanka 1st T20I 2024 Live Score
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஜெயஸ்வால் – சுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால், அரைசதத்தை நெருங்கிய நிலையில், 21 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன், 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில், 16 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு, 6 ஓவர்களில் 76 ரன்கள் சேர்த்தனர்.
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில், ரிஷப் பந்த் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 76 ரன்கள் சேர்த்தபோது, அரைசதத்தை பதிவு செய்த சூர்யகுமார் யாதவ், 26 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய ரிஷப் பந்த் 33 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 49 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹர்த்திக் பாண்டியா 9 ரன்களிலும், ரியான் பராக் 7 ரன்களிலும், ரின்கு சிங் 1 ரன்னிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. அக்சர் பட்டேல் 5 பந்துகளில் ஒரு சிக்சருடன் 10 ரன்களும், அர்ஷ்தீப் சிங் ஒரு ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இலங்கை அணி தரப்பில், பதிரானா 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா, பெர்ணான்டோ, மதுஷங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில், நிசங்கா, குஷால் மெண்டீஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இலங்கை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவர்களில் 84 ரன்கள் சேர்த்து அசத்தியது.
அதிரடியாக விளையாடிய மெண்டீஸ் அரைசதத்தை நெருங்கிய நிலையில், 27 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய குஷால் பெராரே அதிரடியாக நிசங்காவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியில் அசத்திய நிசங்கா, 48 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 14 ஓவர்களில் 140 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என வலுவான நிலையில், இருந்தது.
இதனிடையே அதிரடியாக விளையாடி குஷால் பெராரே 14 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 20 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 15 ஓவர்களில் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் என்ற வலுவான நிலையில், இருந்ததாலும் அடுத்து வந்த வீரர்களில், கமிந்து மெண்டீஸ் மட்டும் 12 ரன்கள் என்ற இரட்டை இலக்க ரன்னை எடுத்தார் மற்ற வீரர்கள், ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். குறிப்பாக, அசலங்கா, ஷனகா, மதுஷங்கா ஆகியோர் டக் அவுட் ஆகினர்.
ஹசரங்கா, தீக்ஷனா ஆகியோர் தலா 2 ரன்களும், பதிரானா 6 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதனால் 19.2 ஓவர்களில் இலங்கை அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தனது. இதன் மூலம் இந்திய அணி 43 ரன்கள வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 1.2 ஓவர்களில் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“