/tamil-ie/media/media_files/uploads/2019/08/cricket-1.jpg)
india, westindies, test cricket, virat kohli, jamaica, rishabh pant, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், டெஸ்ட் கிரிக்கெட், விராட் கோலி, ஜமைக்கா, ரிஷப் பண்ட்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வுசெய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டுவென்டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது. டெஸ்ட் தொடரிலும் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஜமைக்காவில் இன்று (ஆகஸ்ட் 30) துவங்கிய 2வது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவுற்றாலும் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.
முதல் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்றதன் மூலம், அந்நிய மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.