/indian-express-tamil/media/media_files/iVlOR9s1tYpIP1nGGKOX.jpg)
நடிகர் அஜித் தற்போது 'விடா முயற்சி' மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். அவர் தற்போது 'விடா முயற்சி' மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதை முடித்தபின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைவார்.
இந்நிலையில், நடிகர் அஜித் குமாரை தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் சந்தித்துப் பேசினார். ஏப்ரல் 4 அன்று நடராஜன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அன்று அவர் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகியது.
இந்த சந்திப்பு பற்றி தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான கமெண்டரியில் நடராஜன் பேசினார். அப்போது அவர், "அது எனக்கு அது ரொம்ப ஸ்பெஷல் பிறந்த நாளாக மாறியது. அவரை (அஜித்) சந்திக்க போறேன் என்று எனக்கு தெரியாது. எனது அணியுடன் நான் சென்று இருந்தேன். அப்போது சர்ப்ரைஸாக அவரை சந்திக்க வைத்தார்கள். அஜித் சார் ரொம்ப அன்பான, பண்பான மனிதர். நீங்க சொன்ன நம்ப மாட்டீங்க, நாங்கள் அனைவரும் கிளம்பும்போது, எங்களது கார் கதவை திறந்து வைத்து எங்களை வழி அனுப்பி வைத்தார்" என்று கூறி நெகிழ்ந்தார் நடராஜன்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.