Advertisment

சர்வதேச வில்வித்தை: உலகின் நம்பர்.1 அணியாக இந்தியா விஸ்வரூபம்!

வரலாற்றில் முதல் முறையாக, வில்வித்தையில் இந்திய மகளிர் அணி நம்பர்.1 அந்தஸ்தை பெற்றுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சர்வதேச வில்வித்தை: உலகின் நம்பர்.1 அணியாக இந்தியா விஸ்வரூபம்!

சர்வதேச வில்வித்தை சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெண்கள் அணி பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

Advertisment

சர்வதேச வில்வித்தை சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பெண்கள் அணி பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 342.600 புள்ளிகள் பெற்று இந்திய மகளிர் அணி முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, வில்வித்தையில் இந்திய மகளிர் அணி நம்பர்.1 அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த சீசினில் நடந்த உலக போட்டிகளில் இந்திய பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில், 336.600 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் சீன தைபே அணி உள்ளது. 302.300 புள்ளிகளுடன் கொலம்பியா மூன்றாம் இடத்திலும், 284 புள்ளிகளுடன் அமெரிக்கா நான்காம் இடத்திலும் உள்ளது.

இந்திய வில்வித்தை அணியில் ஜோதி சுரேகா வெண்ணம், முஸ்கன் கிரர், மதுமிதா குமாரி, த்ரிஷா தேப் ஆகியோர் சிறந்த வீராங்கனைகளாக உள்ளனர். இவர்களால் தான் இந்தியா, உலகின் நம்பர்.1 அணியாக முன்னேறியுள்ளது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக, 2015ல் நடந்த ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த 22 வயதான ஜோதி சுரேகா வெண்ணம், தற்போது இந்திய அணியின் தலைசிறந்த வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment