Advertisment

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் தகுதி; பதக்கம் உறுதி

ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிர் கிரிக்கெட்டில் வங்காளதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
ஆசிய விளையாட்டு கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்

 ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிர் கிரிக்கெட்டில் வங்காளதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி உள்ளது.

Advertisment

ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் சீனாவின் ஹாங்சவ் நகரில் நடந்து வருகிறது. அரையிறுதியின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதன்படி அதன் தொடக்க ஆட்டக்காரர்களான ஷாதி ராணி மற்றும் ஷமீமா சுல்தானா இருவரும் விளையாடினர். தொட்டக்க ஆட்டத்திலேயே ரன்கள் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.

இந்த போட்டியில் கேப்டன் நிகர் சுல்தானா 12 ரன்கள் எடுத்துள்ளார். சோபனா 8 ரன்கள், ரித்து மோனி 8 ரன்கள், கட்டூன் 3 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.  மற்றவர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நஹிடா அக்தர் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

17.2 ஓவர்களில் மொத்தம் 51 ரன்கள் எடுத்த நிலையில், வங்களாதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து, 20 ஓவர்களில் 52 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய மகளீர் அணி விளையாடியது.

இந்திய அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷெபாலி வர்மா 12 பந்துகளில் 17 ரன்கள் மற்றும் 2 பவுண்டரிகள் எடுத்து அணியை வெற்றியை நோக்கிக் கொண்டு சென்றார். தொடர்ந்து அவர் ஆட்டமிழந்தார்.  இதை தொடர்ந்து விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்  20 ரன்களுடனும், கனிகா அகுஜா 1 ரன்னுடமும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி 8.2 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்து உள்ளது.  இந்த வெற்றி மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதால், இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

  

cricket news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment