/indian-express-tamil/media/media_files/YIKtvSoB58563ifRIEfz.jpeg)
Puducherry
சர்வதேச டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஜூனியர் ஆண்கள், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்குபெற்று விளையாடின.
இதில் ஜூனியர் ஆண்கள் அணியில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரித்விராஜ் ஆதி, ஈபன் ஆகிய மூன்று வீரர்கள் மற்றும் சீனியர் ஆண்கள் அணியில் ராகுல் பிரசாந்த் எழில் விஜய் ஆகிய நான்கு வீரர்களும், சீனியர் பெண்கள் அணியில் சுஷ்மிதா ராஜா பொன்மதி ஆகிய இரண்டு வீராங்கனைகள் பங்குபெற்று விளையாடினர்.
இலங்கை இந்தியா இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இத்தொடரில் வெற்றி பெற்று தாயகம் திரும்பிய புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அணி வீரர் வீராங்கனைகள் சட்டப்பேரவை தலைவர்செல்வம் ஆர் அவர்களை இன்று 21.05.2024 நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் வீரர் வீராங்கனைகளை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.