Advertisment

15-வது ஓவரிலே பந்து ரிவர்ஸ்-ஸ்விங் ஆனது எப்படி? இந்திய வீரர்கள் மீது இன்சமாம் பரபர குற்றச்சாட்டு!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியின் போது, இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பரபரப்பான குற்றம் சாட்டை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Inzamam ul Haq claims India did some serious work on ball in T20 World Cup game vs Australia Tamil News

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

T20 World Cup 2024 | Indian Cricket Team | Inzamam Ul Haq | India Vs Australia: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

Advertisment

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றில் இந்தியா அதன் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் 92 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. 

தொடர்ந்து, 206 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா சுப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Inzamam-ul-Haq claims India did some ‘serious kaam’ on ball in T20 World Cup game vs Australia

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியின் போது, இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பரபரப்பான குற்றம் சாட்டை தெரிவித்துள்ளார். 

இன்சமாம் பாகிஸ்தானின் 24 செய்தி சேனலில் ‘உலகக் கோப்பை ஹங்காமா’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சலீம் மாலிக்குடன் பங்கேற்று இருந்தார். அப்போது அவர் பேசுகையில், “அர்ஷ்தீப் சிங் 15-வது ஓவரை வீசும்போது, ​​பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது என்பதை நீங்கள் புறக்கணிக்க முடியாது. புதிய பந்து எப்படி இவ்வளவு சீக்கிரமே ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கும். 

12-13வது ஓவரில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தயாராக இருந்தது. அதனால் தான் சொல்கிறேன், போட்டி நடுவர்கள் தங்கள் கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். ரிவர்ஸ் ஸ்விங் பற்றி எங்களுக்கும் ஓரளவு தெரியும். அர்ஷ்தீப் சிங் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடிந்தால், பந்தின் மீது எதோ சந்தேகத்திற்குரிய வேலை செய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார். 

அப்போது குறுக்கிட்டு பேசிய சலீம் மாலிக், 'இந்தியா உட்பட சில அணிகள் என்று வரும்போது அதிகாரிகள் எப்போதும் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்' என்று கூறினார். தொடர்ந்து, அர்ஷ்தீப் சிங் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தது பற்றி தான் ஏன் ஆச்சரியப்பட்டதாக இன்சமாம் விளக்கினார்.

"ரிவர்ஸ் ஸ்விங்கில் உள்ள விஷயம் என்னவென்றால், பும்ரா அதைச் செய்யலாம். ஏனென்றால், அவரது பவுலிங் ஆக்சன் அப்படி இருக்கும். அதை என்னால் புரிந்து கொள்ள முடியும். பந்தை ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஏற்ப மாற்ற அதனை அந்த வகையில் அமைக்க வேண்டும். ஒரு வேளை பந்து அதிகமாக அடிக்கப்பட்டிருக்கலாம், பிட்ச் அப்படி இருந்திருக்கலாம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஸ்டாண்டுகளைச் சுற்றி அடித்த பிறகு பந்து தாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது என்ன நடந்தாலும், நடுவர்கள் கவனமாகக் கண்காணித்திருக்க வேண்டும்” என்று இன்சமாம் சுட்டிக்காட்டினார்.

டி20 உலகக்கோப்பை லீக் சுற்றில் குரூப் ஏ பிரிவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்த நிலையில் அமெரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறத் தவறிவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Inzamam Ul Haq T20 World Cup 2024 India Vs Australia Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment