/tamil-ie/media/media_files/uploads/2018/04/a956.jpg)
புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ரஹானே பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. ஷேன் வாட்சன் சதம் விளாசினார். அவர் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா 29 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். தோனி 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 46 ரன்கள் எடுத்தார். இதனால் 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக வென்றது.
நான்கு போட்டியில் ஆடியுள்ள சென்னை அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். அதேசமயம், ஐந்து போட்டியில் ஆடியுள்ள ராஜஸ்தான் அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us