IPL 2020 Playoff : ஐபிஎல் 13 வது சீசனில் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது பெங்களூர்.ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவதுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்யும். தோல்வி அடையும் அணிக்கு, நாளை நடக்கும் ஐதராபாத் அணிக்குரிய இறுதி லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்து பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும்.
மும்பை மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. டெல்லி அணி இன்று பெங்களூருடன் மோதுகிறது. இதில் வெற்றிபெறும் அணி 2வது டீமாக பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும். தோற்கும் அணி கடைசி ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்கவேண்டும். கடைசி போட்டியில் நாளை மறுநாள் மும்பையுடன் ஐதராபாத் மோதுகிறது. வாழ்வா-சாவா போட்டியில் ஐதராபாத் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் எளிதாக பிளே ஆப் வாய்ப்பை பெறும்.
ஏனெனில் நல்ல ரன்ரேட்டை வைத்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் வெளியேற்றப்படலாம். ஒருவேளை ஐதராபாத் தோற்றால் இந்த 3 அணிகளில் ஒன்றுக்கு வாய்ப்பு கிடைக்கும். எப்படியும் 14 புள்ளிகளை பெறும் 2 அணிகள் பிளேஆப் வாய்ப்பை பெறும். இதற்கு முன் 2010ல் இதேபோல் 7 வெற்றிகளை பெற்ற 2 அணிகள் பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. இதனால் அடுத்த 4 ஆட்டங்கள் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”