IPL 2020: எதிர்பார்த்ததை விட கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73-ஐ எட்டிவிட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் இதனால் உயரிழக்க, இந்தியா தனது முதல் கொரோனா இறப்பை பதிவு செய்தது.
இந்நிலையில், மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் 2020 போட்டிகள், ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியா - தென்.ஆ., அணிகள் இடையிலான மீதமுள்ள இரண்டு போட்டிகளும், ரசிகர்கள் இன்றி, கதவுகள் மூடப்பட்ட அரங்கில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.