IPL 2022: On morning of crucial game against CSK, DC team member tests Covid-19 positive: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவருடன் அறையைப் பகிர்ந்து கொண்ட மற்றொரு பந்து வீச்சாளருடன் சேர்ந்து அந்த வீரரை தனிமைப்படுத்த டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது.
ஐபிஎல் நெறிமுறையின்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றொரு சுற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதுவரை அனைத்து உறுப்பினர்களும் தங்கள் அறைகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை இன்று மாலை டிஒய் பாட்டீல் மைதானத்தில் சந்திக்க உள்ளது. ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் டெல்லி ஐந்தாவது இடத்தில் உள்ளது மற்றும் ஐந்து ஆட்டங்களில் வெற்றியும், ஐந்தில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
முன்னதாக, ரிக்கி பாண்டிங்கின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா உறுதியானதால், பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் சில ஆட்டங்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளார்.
கடந்த மாதம், டெல்லி அணியின் வெளிநாட்டு வீரர்களான டிம் சீஃபர்ட் மற்றும் மிட்செல் மார்ஷ், மற்றும் அவர்களின் நான்கு ஆதரவு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஐபிஎல் அணிகளில் அதிக கொரோனா பாதிப்புகளை கண்ட ஒரே குழு டெல்லி அணி ஆகும், இதன் விளைவாக அட்டவணை மற்றும் இடம் மாற்றப்பட்டது.
முன்னதாக புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவிருந்த டெல்லி கேபிடல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் போட்டி செவ்வாய்கிழமை பிரபோர்ன் மைதானத்திற்கு மாற்றப்பட்டது.
இதையும் படியுங்கள்: அதிவேக பந்துவீசி மிரட்டிய உம்ரான் மாலிக்… அவரின் சாதனையை அவரே முறியடிப்பு!
ஒரு மூடிய சூழலில் நீண்ட தூர பேருந்து பயணத்தின் போது கண்டறியப்படாத வழக்குகள் காரணமாக வைரஸ் மேலும் பரவுவதைத் தவிர்க்க இது செய்யப்பட்டது.
"டெல்லி கேப்பிட்டல்ஸ் குழுவில் (அப்போதைய) 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது" என்று பிசிசிஐ முந்தைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.