/indian-express-tamil/media/media_files/2025/05/06/XmH4ZZBAmbkKTglCd28u.jpg)
இந்த சீசனை மோசமாக தொடங்கிய அணிகளுள் ஒன்று மும்பை. ஆனால், அந்த அணி தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளுடன், தற்போது புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025 playoffs race: RCB, GT, MI are frontrunners; PBKS placed well to return to top four
முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. டெல்லி, கொல்கத்தா, லக்னோ அணிகள் இன்னும் போட்டியில் உள்ளன. இதில் எந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
ஐ.பி.எல் 2025 - பிளேஆஃப்க்கு முன்னேறும் முன்னணி அணிகள் யார்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: புள்ளிகள்:16, நெட் ரன்ரேட் : 0.482
மீதமுள்ள போட்டிகள்: லக்னோ (வெளியே), ஐதராபாத் (உள்ளூரில்), கொல்கத்தா (உள்ளூரில்)
நடப்பு தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை ஆர்.சி.பி அணி வெளிப்படுத்தி வருகிறது. சாம்பியன் பட்டத்தை வெல்ல துடிக்கும் முக்கிய போட்டியாளர்களாகவும் அந்த அணி இருக்கிறது. இதுவரை நடந்த 11 போட்டிகளில் 8-ல் வென்று 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் வலுவாக இருக்கிறது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் கூட அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். அவர்கள் மூன்றையும் வென்றால், முதல் தகுதிச் சுற்றில் விளையாடுகிறார்கள்.
ஆனால் 5 அணிகள் 16 அல்லது 18 புள்ளிகளுடன் முடிக்க வாய்ப்புள்ளதால், ஆர்.சி.பி அணி இன்னும் இரண்டு வெற்றிகளை பெற நினைக்கும். அவர்களின் மூன்று போட்டிகளில், ஒன்று லக்னோவுடன் உள்ளது. தற்போது அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வரும் நிலையில், தங்களது சொந்த மைதானத்தில் வைத்து எதிர்கொள்கிறது ஆர்.சி.பி. சமீபத்தில் சொந்த மைதானத்தில் ஆர்.சி.பி அணி வெற்றி இலக்கை சிறப்பாக எட்டிப்பிடித்தனர். அதனால் அவர்கள் நம்பிக்கையுடன் களமாடுவார்கள்.
குஜராத் டைட்டன்ஸ்: புள்ளிகள்: 14, நெட் ரன்ரேட்: 0.867
மீதமுள்ள போட்டிகள்: மும்பை (வெளியே), டெல்லி (வெளியே), லக்னோ (உள்ளூரில்), சென்னை (உள்ளூரில்)
இந்த சீசனில் தரமான ஃபார்மில் உள்ள முதல் மூன்று அணிகளுடன், குஜராத் அணி எந்த தொந்தரவும் இல்லாமல் முதல் நான்கு இடங்களில் நீடித்து வருகிறது. அந்த அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்து, நான்கு சீசன்களில் மூன்றாவது முறையாக பிளே-ஆஃப்களுக்குள் நுழைய அவர்களுக்கு வலுவான வாய்ப்பு உள்ளது.
சக போட்டியாளர்களான மும்பை மற்றும் டெல்லிக்கு எதிரான இரண்டு வெளியே நடக்கும் போட்டிகள் எந்த வழியிலும் செல்லலாம் என்றாலும், லக்னோ மற்றும் சென்னைக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் கடைசி இரண்டு போட்டிகளை விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. அவர்களின் கடைசி ஆட்டம் லீக் சுற்றில் கடைசியாக நடக்கும் போட்டியின் முந்தைய ஆட்டம் என்பதால், நெட் ரன்ரேட்டைப் பொறுத்தவரை கூட, தகுதி பெற சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் அவர்களுக்கு பிளே ஆஃப் வாய்ப்பை வழங்கும். ஏனெனில் அவர்களிடம் நல்ல நெட் ரன்ரேட் உள்ளது. அவர்கள் மூன்றில் வென்றால், இறுதிப் போட்டிக்கு வர இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
மும்பை இந்தியன்ஸ்: புள்ளிகள்: 14 நெட் ரன்ரேட்: 1.274
மீதமுள்ள போட்டிகள்: குஜராத் (உள்ளூரில்), பஞ்சாப் (வெளியே), டெல்லி (உள்ளூரில்)
இந்த சீசனை மோசமாக தொடங்கிய அணிகளுள் ஒன்று மும்பை. ஆனால், அந்த அணி தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளுடன், தற்போது புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது. 4-க்கும் மேற்பட்ட அணிகள் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற்றால், சிறந்த நெட் ரன்ரேட் கொண்ட அணியாகவும் அவர்கள் இருப்பது மிகவும் முக்கியம். இருப்பினும், மீதமுள்ள அனைத்து போட்டிகளும் வலுவான எதிரணிகளான குஜராத், பஞ்சாப் மற்றும் டெல்லிக்கு எதிராக இருப்பதால் அது அவ்வளவு எளிதல்ல.
மும்பை அணிக்கு இருக்கும் ஒரு அனுகூலம் என்னவென்றால், அவர்கள் குஜராத் மற்றும் டெல்லியை சொந்த மைதானத்தில் விளையாடுகிறார்கள். ஒருவேளை அவர்கள் மூன்றிலும் தோற்றால், நான்கு அணிகள் அவர்களை முந்திச் செல்ல முடியும். இருப்பினும், அவர்கள் மூன்றிலும் ஒரு சிறிய வித்தியாசத்தில் தோற்றாலும், அவர்கள் நெட் ரன்ரேட் வழியாக மற்றவர்களின் உதவியுடன் முந்திச் செல்ல முடியும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க, குஜராத்துக்கு எதிராக உட்பட குறைந்தது இரண்டு வெற்றிகளாவது அவர்களுக்குத் தேவை.
ஐ.பி.எல் 2025: பிளே-ஆஃப்க்குள் நுழைய எந்த அணிகளுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது?
பஞ்சாப் கிங்ஸ்: புள்ளிகள்: 15, நெட் ரன்ரேட்: 0.376
மீதமுள்ள போட்டிகள்: டெல்லி (உள்ளூரில்), மும்பை (உள்ளூரில்), ராஜஸ்தான் (வெளியே)
பஞ்சாப் அணி சரியான நேரத்தில் புள்ளிகள் பட்டியலில் உச்சத்தை அடையத் தொடங்கியுள்ளனர். லக்னோ அணிக்கு எதிரான அவர்களின் அபார வெற்றி நெட் ரன்ரேட்டை அதிகரித்துள்ளது. அவர்கள் இப்போது பெற்றுள்ள 15 புள்ளிகள் என்பது 2014-க்குப் பிறகு அவர்களின் அதிகபட்சமாகும். அடுத்து அவர்கள் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுடன் விளையாடுகிறார்கள்.
பஞ்சாப் அணி மூன்றில் இரண்டு வெற்றிகளை பெற்றால், 2014-க்குப் பிறகு முதல் பிளே-ஆஃப் இடத்தைப் பற்றிய அவர்களின் கனவு நனவு ஆகலாம். 18+ புள்ளிகளுடன் முடிக்கும் திறன் கொண்ட 5 அணிகளுடன், 17 புள்ளிகள் போதுமானதாக இருக்காது. எனவே நிச்சயமாக, அவர்களுக்கு 19 புள்ளிகள் தேவை. அவர்களின் நெட் ரன்ரேட்டை அதிகரிக்க போதுமான அளவு பெரியதாக இருந்தால், இன்னும் ஒரு வெற்றியுடன் அவர்கள் முன்னேற முடியும். அவர்கள் மூன்றையும் இழந்தால், அது மற்றொரு தோல்வியின் கதையாக இருக்கலாம், ஏனெனில், இந்த சீசனில் 16 புள்ளிகள் என்பது மேஜிக் எண்ணாக இருக்க வாய்ப்புள்ளது.
ஐ.பி.எல் 2025: பிளே-ஆஃப்க்குள் நுழைய எந்த அணிகளுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு?
டெல்லி கேபிடல்ஸ்: புள்ளிகள்:13, நெட் ரன்ரேட்:0.362
மீதமுள்ள போட்டிகள்: பஞ்சாப் (வெளியே), குஜராத் (உள்ளூரில்), மும்பை (வெளியே)
நடப்பு தொடரை தொடர் வெற்றிகளுடன் தொடங்கிய அணி டெல்லி. அந்த அணி முதல் ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளை ருசித்தது. ஆனால் இப்போது 11 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நேற்று ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஒரு புள்ளியுடன் தப்பினர், ஆனால், அவர்கள் பிளே-ஆஃப்க்கு தகுதி பெற மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
அவற்றில் இரண்டு போட்டிகள் பஞ்சாப் மற்றும் மும்பைக்கு எதிராகவும், இடையில் குஜராத்துக்கு எதிரான ஒரு சொந்த மைதானத்தில் நடக்கும் போட்டியும் இருப்பதால் அவர்கள் மிகவும் கடினமான போட்டிகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் அனைத்து போட்டிகளிலும் வென்றால், அவர்களால் 19 புள்ளிகளைப் பெற முடியும். இது போதுமானதாக இருக்கும். இன்னும் ஒரு தோல்வி அவர்களின் பாதையை சவாலானதாக மாற்றும். ஏனெனில் அவர்களின் போட்டியாளர்களிடம் அவர்கள் புள்ளிகளை இழக்க வேண்டியிருக்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: புள்ளிகள்: 11, நெட் ரன்ரேட் : 0.249
மீதமுள்ள போட்டிகள்: சென்னை (உள்ளூரில்), ஐதராபாத் (வெளியே ), ஆர்.சி.பி (வெளியே)
நடப்பு சாம்பியன்களானகொல்கத்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அவர்களின் பிளே-ஆஃப் நம்பிக்கை உயிர்ப்புடன் உள்ளது. ஆனால் அது வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் மட்டுமே, சென்னைக்கு எதிராக சொந்த மைதானத்திலும், ஐதராபாத் மற்றும் பெங்களூருக்கு எதிரான இரண்டு வெளியூர் போட்டிகளிலும், அவர்கள் மூன்றிலும் வென்றாலும், 17 புள்ளிகளை மட்டுமே பெற முடியும் என்ற நிலையில் உள்ளனர். மேற்கூறிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களைக் கடந்து செல்ல இது போதுமானதாக இருக்காது. மும்பை, குஜராத், டெல்லி மற்றும் லக்னோ மோசமாகத் தடுமாறினால், அவர்கள் 15 புள்ளிகளுடன் மட்டுமே எடுக்க இன்னும் மிகக் குறைந்த வாய்ப்பு உள்ளது.
ஐ.பி.எல் 2025: பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிய அணிகள் எவை?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: புள்ளிகள்:10, நெட் ரன்ரேட்:-0.469
மீதமுள்ள போட்டிகள்: ஆர்.சி.பி (உள்ளூரில்), குஜராத் (வெளியே), ஐதராபாத் (உள்ளூரில்)
எதிர்பார்த்தது போலவே, லக்னோ அணி பந்துவீச்சு சிக்கல்களை சந்திக்க தொடங்கியுள்ளது. மேலும் அவர்களின் பேட்டிங் அதிக நம்பிக்கையைத் தூண்டவில்லை, ஏனெனில் பஞ்சாபிடம் அவர்கள் பெற்ற தோல்வி அவர்களை கடுமையாகப் பாதித்துள்ளது. அவர்கள் இப்போது 16 புள்ளிகளை மட்டுமே பெற முடியும், இது அவர்கள் தகுதி பெற போதுமானதாக இருக்காது.
லக்னோ அணியின் மீதமுள்ள போட்டியாளர்கள் தடுமாறினாலும், அவர்கள் தங்கள் மூன்று போட்டிகளிலும் ஒவ்வொன்றிலும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அவர்களின் நெட் ரன்ரேட் மைனஸில் உள்ளது. அவர்களுக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகள் சொந்த மைதானத்தில் இருந்தாலும், அது இரண்டு வலுவான அணிகளுக்கு (ஆர்.சி.பி மற்றும் குஜராத்) எதிராக உள்ளது. எனவே லக்னோவிற்கு அதிக வாய்ப்பு இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.