/indian-express-tamil/media/media_files/g4xDL01AQJQCoPNjyJ0Y.jpg)
ஐ.பி.எல் ஏலத்தில் தேர்வான தமிழக வீரர் ஷாருக்கான்
IPL Auction 2023: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள 17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை (19.12.2023) துபாயில் வீரர்களின் மினி ஏலம் நடைபெற்றது. ஐ.பி.எல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில், தமிழக வீரர்கள், ஷாருக்கான், மணிமாறன் சித்தார்த் கோடிகளைக் குவித்து தேர்வாகியுள்ளனர்.
துபாயில் செவ்வாய்க்கிழமை (19.12.2023) நடைபெற்ற ஐ.பி.எல் வீரர்களின் மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகள் பங்கேற்றன.
ஐ.பி.எல் அணிகளில் வீரர்களை ஏலம் எடுப்பதற்கு காலியாக இருந்த மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்தனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
இந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில், தமிழக வீரர்கள், ஷாருக்கான், மணிமாறன் சித்தார்த் ஆகிய 2 வீரர்கள் மட்டும் கோடிகளைக் குவித்து ஏலத்தில் தேர்வாகியுள்ளனர். தமிழக வீரர் ஷாருக்கான் - ரூ.7.4 கோடி - குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அடுத்து, மணி மாறன் சித்தார்த் - ரூ. 2.4 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.