சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் தீபக் சாஹர். ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் தீபக்.
Advertisment
ஆல்-ரவுண்டரான இவர் பவர்பிளே ஓவர்களை சிறப்பாக வீசக் கூடிய திறன் கொண்டவர். 2018-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு இவர் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்த முறை ஏலத்தில் இவரை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் சிஎஸ்கேவுடன் போட்டிப் போட்டன.
ஆனாலும், யாரும் கேட்காத அளவுக்கு அதிகத் தொகைக்கு தீபக் சாஹரை தக்க வைத்துள்ளது சிஎஸ்கே. கடந்த சீசனில் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்த தீபக் சாஹரின் பந்துவீச்சு முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
தீபக் சாஹரை விட்டுக் கொடுத்துவிடாமல் அணி நிர்வாகம் அவரை ஏலத்தில் எடுத்துள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சமூக வலைதளங்களிலும் தீபக் சாஹரை தேர்வு செய்ததற்கு நன்றி என்று ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
At this price won’t be surprised if we get to see more of Deepak Chahar the all rounder. May be at the top of the order in few games too. #DeepakChahar#IPLAuction
சிஎஸ்கே அணியில் விளையாடியவரும், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங்கும் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், நீங்கள் சிஎஸ்கே அணிக்கு தேர்வானதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், தீபக் சாஹர் 2018இல் சிஎஸ்கே அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவரது மதிப்பு ரூ.14 கோடியாக உயர்ந்துள்ளது. ரசிகர் ஒருவர் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்து சாஹரை ஏலத்தில் எடுத்த பிறகு சிஎஸ்கே ஓனரின் நிலை என்று கூறி வேடிக்கையாக ஒரு பதிவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.