Advertisment

IPL Player Auctions: மும்பைக்கு அடித்த ஜாக்பாட்... 5 வீரரை தக்கவைக்க பி.சி.சி.ஐ அனுமதி?

இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ள தொடரில் களமாடும் 10 அணிகளுக்கு பி.சி.சி.ஐ அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
 IPL Player Auctions BCCI likely to allow 5 retentions Mumbai Indians Tamil News

வரவிருக்கும் ஏலத்திற்கான தக்கவைப்பு செலவுகளை பி.சி.சி.ஐ இன்னும் உறுதியாகக் கூறவில்லை. 2022 ஆம் ஆண்டில், மும்பை நான்கு வீரர்களைத் தக்கவைத்தபோது, ​​ரோகித் அதிகபட்சமாக ரூ. 16 கோடியைப் பெற்றார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ, இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ள தொடரில் களமாடும் 10 அணிகளுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை தக்கவைப்பதற்கான கதவைத் திறக்கும். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL Player Auctions: BCCI likely to allow 5 retentions, opens door for Mumbai Indians

பி.சி.சி.ஐ தலைமையகத்தில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், வீரர்களை தக்கவைப்பது குறித்து 10 அணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியது. அவர்களில் பெரும்பாலோர் 5-6 வீரர்களைத் தக்கவைக்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை எடைபோட்டு பார்த்த பி.சி.சி.ஐ, அதனை பரிசீலிக்க முடிவு செய்துள்ளது. ஏனெனில், ஐந்து வீரர்களை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் அணிகளின் பிராண்ட் மதிப்பும் பாதுகாக்கப்படும் பி.சி.சி.ஐ என்று நம்புகிறது.

2022 சீசனுக்கு முன்னதாக, ஒரு ஐ.பி.எல் அணி அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல், மூன்று இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் தக்கவைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஒவ்வொரு அணியும் எத்தனை வெளிநாட்டு வீரர்களை தக்கவைக்க முடியும் என்பது குறித்து இதுவரை எந்த தெளிவும் இல்லை.

மும்பைக்கு சாதகம் 

ஐந்து வீரர்கள் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், தற்போது அனைவரது பார்வையும் மும்பை இந்தியன்ஸ் மீது உள்ளது. கடந்த தசாப்தத்தில் அவர்களின் அணி அமைப்பானது அதே நிலையிலேயே இருந்தபோதிலும், இந்த ஆண்டு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியின் கீழ் ஒரு மோசமான சீசனுக்குப் பிறகு, அவர்கள் தங்களது அணியில் எந்தெந்த வீரர்களை தக்கவைப்பார்கள், எப்படி அவர்கள் வரிசைப்படுத்துகிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

வரவிருக்கும் ஏலத்திற்கான தக்கவைப்பு செலவுகளை பி.சி.சி.ஐ இன்னும் உறுதியாகக் கூறவில்லை. 2022 ஆம் ஆண்டில், மும்பை நான்கு வீரர்களைத் தக்கவைத்தபோது, ​​ரோகித் அதிகபட்சமாக ரூ. 16 கோடியைப் பெற்றார். அதைத் தொடர்ந்து பும்ரா (ரூ. 12 கோடி), சூர்யகுமார் (ரூ. 8 கோடி) மற்றும் கீரன் பொல்லார்ட் (ரூ. 6 கோடி) பெற்றார். இந்த முறை, பும்ரா மற்றும் சூர்யகுமார் பங்குகள் உயர்த்தப்பட்ட நிலையில், அவர்கள் வீரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், அவர்கள் தக்கவைக்கப்பட்ட விலையைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

தக்கவைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை பி.சி.சி.ஐ முடிவு செய்யும் நிலையில், வரவிருக்கும் வீரர்களின் ஏலம் மிகப்பெரியதாக இருக்கும். அந்த கூட்டத்தின் போது, ​​போட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் பெரும்பான்மையான அணிகளின் உரிமையாளர்கள், நான்கு அல்லது ஐந்து வருட சுழற்சியில் பெரிய ஏலங்கள் நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். பி.சி.சி.ஐ-யிடம் அவர்கள் முதலீடு செய்த முக்கிய திறமைகளை இழப்பதில் ஆர்வம் காட்டாததால், பெரிய வீரர்களின் ஏலத்தை ஒரு வருடம் தாமதப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். கடந்த இரண்டு மெகா ஏலம் நான்கு ஆண்டு சுழற்சியில் (2018 மற்றும் 2022) நடத்தப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷாருக்கானும் இந்த ஆண்டு மெகா ஏலம் நடத்தக்கூடாது என்று ஆதரித்தவர்களில் ஒருவர். கே.கே.ஆர் தவிர, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் மெகா ஏலத்தை ஒத்திவைக்க வலியுறுத்தின.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ipl Ipl Cricket Mumbai Indians Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment