X
Chennai Super Kings (CSK) youngster Shaik Rasheed with skipper MS Dhoni. (Videograbs)
Shaik Rasheed - MS Dhoni - CSK Tamil News: 16வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல் – 2023) போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ல் வெற்றி 2ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக சென்னை அணி ராஜஸ்தான் அணியுடன் மோத உள்ளது. இப்போட்டியானது நாளை (வியாழக்கிழமை) இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரான ஷேக் ரஷீத், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் பேட் தொடர்பான உணர்ச்சிகரமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
சி.எஸ்.கே-வின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், யு19 உலகக் கோப்பை 2022 அணியில் இடம் பெற்றிருந்த ஷேக், தோனி விளையாடிய 'ரீபோக்' பேட்டை எப்படி வாங்க முடியவில்லை என்பதையும், இறுதியாக அதுபோன்ற பேட்டை சொந்தம் ஆக்குகையில், அது எப்படி இருந்தது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
"எனக்கு 8 வயதாக இருந்தபோது, அது என் பிறந்தநாள், எனக்கு ரீபோக் பேட் வேண்டும் என்று என் அப்பாவிடம் சொன்னேன். தோனி பாய் தான் அந்த பேட்டையைப் பயன்படுத்தினார். அந்த நேரத்தில் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால் அந்த பேட்டையை வாங்க முடியவில்லை. அதன் பிறகு, ஒரு நாள் முழுவதும், நான் அழுது கொண்டிருந்தேன்.
ஒரு ஆட்டத்தின் போது நான் ஒரு பந்துப் பையனாக இருந்தேன், அங்கு யாரோ ஒருவர் அந்த ரீபோக் பேட்டையைப் பயன்படுத்துவதைப் பார்த்தேன். எப்படியோ என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் உண்மையில் அந்த பேட்டுடன் விளையாட விரும்பினேன், ”என்று கூறினார்.
முன்னதாக, ஐபிஎல் 2023 ஏலத்தில் 20 லட்சத்திற்கு சிஎஸ்கே-யால் எடுக்கப்பட்ட ஷேக், தோனியுடன் தனது முதல் உரையாடலை வெளிப்படுத்தினார். மேலும், தோனி அவரை சிறந்த முறையில் செயல்படும்படி கேட்டுக் கொண்டார் என்றும் அவர் தனது பயிற்சி அமர்வுகளின் போது அவருக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
"மஹி பாய் "ஹாய்" என்றார். அது எனக்கு விசேஷமாக இருந்தது. முதலில் அவரை பேருந்திலும், பிறகு மைதானத்திலுமே சந்தித்தேன். மஹி பாய் என்னிடம், “உனக்குத் தெரிந்ததைச் செய்” என்றார். எனது திறமைக்கு ஏற்றவாறு செயல்படும்படி அவர் என்னிடம் கூறினார்.
நான் பயிற்சியை முடித்த பிறகு டி20 வடிவத்திற்கு எப்படி தயார் செய்வது என்று கற்றுக்கொண்டேன். நான் பந்துவீசும்போது, நான் என்ன செய்ய முடியும் என்று மஹி பாய் எனக்கு அறிவுரை கூறுவார். மேலும் அவர் பந்தை அடித்த பிறகு ஆலோசனைகளை வழங்குவார்." என்றும் ஷேக் ரஷீத் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil