/tamil-ie/media/media_files/uploads/2023/04/tamil-indian-express-2023-04-12T194829.709.jpg)
Delhi Capitals batter Axar Patel celebrates after scoring a half-century during the IPL 2023 cricket match between Delhi Capitals and Mumbai Indians, at the Arun Jaitley Stadium in New Delhi, Tuesday, April 11, 2023. (PTI Photo/Ravi Choudhary)
Axar Patel Tamil News: ரவீந்திர ஜடேஜா சர்வதேச அரங்கில் அறிமுகமானதில் இருந்து ஏறக்குறைய எட்டு வருடங்களாக அக்சர் படேல் அவருக்குக் கீழ் விளையாடி வருகிறார். கடந்த சில மாதங்களில் தான் அவரது கிரிக்கெட் பேட்டிங் பக்கம் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. நேற்று செவ்வாயன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆட்டத்தில் அவர் 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். ஐ.பி.எல் தொடரில் இது அவரது முதல் அரைசதம். இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த ஆட்டத்தில் தோல்வியுற்றதால் அவரது ஆட்டம் வெறும் சைட்ஷோ-வாக மாறிப்போனது.
கடந்த சில ஆண்டுகளில், படேல் தனது பவர் - ஹிட்டிங் விளையாட்டில், குறிப்பாக டெல்லி கேப்பிடல்ஸில், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் கண்காணிப்பு கண்களின் கீழ் பயிற்சி பெற்றார். தரையில் கீழே இறக்கும் போது அவரது முன் பாதத்தின் மறுசீரமைப்பு, அவரது அடிக்கும் வடிவத்தை வைத்திருத்தல் மற்றும் விக்கெட்டின் சதுரமான ஸ்கோரிங் பகுதிகளை உருவாக்குதல் - இவை அனைத்தும் அவரது ஸ்ட்ரோக் விருப்பங்களை விரிவுபடுத்துவதில் பங்களித்தன.
“எனது முன் தோள்பட்டை ஓபன் செய்ய வேண்டும் என்றும், அது எனது லெக் சைட் ஆட்டத்தை மேம்படுத்தும் என்றும், நிலைப்பாட்டை மாற்றும் என்றும் ரிக்கி என்னிடம் கூறினார். இது எனக்கு பெரிதும் உதவியது, ”என்று அக்சர் படேல் கூறியிருந்தார்.
படேலின் பேட்டிங்கில் ரிக்கி பாண்டிங் செய்த தொழில்நுட்ப மாற்றங்கள் அவருக்கு அதிசயங்களைச் செய்துள்ளது. டிசம்பர் 2021 இல் நியூசிலாந்திற்கு எதிரான மும்பை டெஸ்டில், அவர் தனது பேட்டிங் வீச்சில் இரு பக்கங்களையும் காட்டினார். அவர் முதல் இன்னிங்ஸில் 128 பந்தில் 52 ரன்கள் எடுத்து, தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை பதிவு செயதார், அதன் பிறகு 2வது ஆட்டத்தில் 26 பந்தில் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார். ஜூலை 2022ல், அவர் 35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தது முதல் ஒருநாள் போட்டி அரைசதத்தை விளாசினார்.
சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், அக்சர் படேல் 2 அரை சதங்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி (297 ரன்கள்) மட்டுமே ஐந்து இன்னிங்ஸ்களில் அவர் குவித்த 264 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே இந்திய பேட்டர் ஆனார்.
இலங்கைக்கு எதிரான தொடரின் போது இந்திய டி20ஐ கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் பேசிய பிறகு வெள்ளைப் பந்தில் தனது மனநிலை மாறியதை அக்சர் படேல் ஒப்புக்கொண்டு இருந்தார். அவர் இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில், 200 ஸ்டிரைக் ரேட்டுடன் 117 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார்.
“இலங்கை தொடரின் போது நான் வேகம் பெற்றேன். ஹர்திக்குடன் நீண்ட நேரம் உரையாடினேன். என் மனநிலையைப் பற்றி என்னிடம் பேசினார். ஆல்-ரவுண்டராக குறுகிய வடிவத்தில், நீங்கள் விரைவாக 30 ரன்கள் எடுத்தால், உங்கள் வேலை முடிந்துவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள், நீங்கள் சாகசமான ஸ்ட்ரோக்குகளை விளையாட முயற்சிக்கிறீர்கள், ஆனால் ஹர்திக் உடனான விவாதத்திற்குப் பிறகு, நான் இப்போது வித்தியாசமாக நினைக்கிறேன். நான் விளையாட்டை ஆழமாக எடுத்து முடிக்க முயற்சிக்கிறேன்." என்று அக்சர் படேல் கூறினார்.
டி20யில் இந்தியா ஒரு ஃபினிஷரைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டது. டி20 உலகக் கோப்பையின் போது தினேஷ் கார்த்திக்கை இந்தியா முயற்சித்தது. ஆனால் அந்த தந்திரம் தோல்வியடைந்தது. அக்சர் படேல் எந்த வகையிலும் ஒரு ஃபினிஷராக இல்லை என்றாலும், அவர் பெரிய முன்னேற்றங்களைச் செய்துள்ளார். டெஸ்ட் தொடரின் போது நாதன் லியான் கூறியது போல், படேல் ஒரு லோ-ஆடர் பேட்ஸ்மேன் அல்ல. அருண் ஜேட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (22 பந்துகளில் 36 ரன்கள் vs குஜராத் டைட்டன்ஸ்) மற்றும் (25 பந்துகளில் 54 ரன்கள் vs மும்பை இந்தியன்ஸ்) 7-வது இடத்தில் அவரது இரண்டு ஐபிஎல் ஆட்டங்கள், சரியான முறையில் முதலீடு செய்தால், இந்தியா தவறவிட்ட ஃபினிஷராக இருக்க முடியும் என்பதற்கு சான்றாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.