ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுளளது.
அணியின் கேப்டன் என்ற முறையில் ரிஷாப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்கா - வங்காளதேச அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்கா ,கெபெர்ஹாவில் இன்று தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் வங்காளதேச அணி தீவிரம் காட்டும். அதே நேரத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி களம் காணும்.
‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா குஜராத்?
தொடக்க ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மிரட்டிய பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 137 ரன்னில் சுருண்டது. அதன் பிறகு அடுத்த ஆட்டத்தில் சென்னையை 54 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடி எழுச்சி பெற்றது.
இதில் லியாம் லிவிங்ஸ்டன் 60 ரன்கள் எடுத்ததுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக மின்னினார். பேட்டிங்கில் லிவிங்ஸ்டன், தவான், ராஜபக்சே, ஷாருக்கான், ஒடியன் சுமித், பந்து வீச்சில் ரபடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் கை கொடுக்கிறார்கள்.
இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டவ் தனிமைப்படுத்துதலை முடித்து அணியினருடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார். இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
இரு அணிகளும் ஏறக்குறைய சரிசமபலத்துடன் மல்லுகட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
தேசிய கூடைப்பந்து போட்டி: கால் இறுதியில் தமிழக அணிகள்
தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் கால்இறுதி சுற்றுக்கு தமிழக அணிகள் தகுதி பெற்றன.
இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இலவச பயிற்சி; ஆன்லைனில் அழைப்பு விடுக்கும் பத்ரிநாத்!
71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 2-வது கட்ட லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 87-63 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை தோற்கடித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.