மகளிர் உலக கோப்பை தொடரின் கனவு அணி.. பஞ்சாப் அணியின் நம்பிக்கை நாயகன்.. மேலும் செய்திகள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ராஸ் டெய்லர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சர்வதேச போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ராஸ் டெய்லர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சர்வதேச போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
மகளிர் உலக கோப்பை தொடரின் கனவு அணி.. பஞ்சாப் அணியின் நம்பிக்கை நாயகன்.. மேலும் செய்திகள்

ஹார்ட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்த ஐ.பி.எல் அணி

Advertisment

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களுரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் வலுவான மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி கம்பீரமாக வீறுநடை போடுகிறது.

இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு அணி 2 ஆட்டங்களில் ஒன்றில் தோல்வியும் ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ளது.

Advertisment
Advertisements

இதனால், இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் உலக கோப்பை தொடரின் கனவு அணி

2022-ம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியில் ஒருவர் கூட இடம் பெறவில்லை.

12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 7-வது முறையாக கோப்பையை வென்றது. இந்திய மகளிர் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.

இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை கனவு அணியை ஐசிசி வெளியிட்டது.

இந்த அணியில் 4 ஆஸ்திரேலியா வீராங்கனைகள், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியில் 3 வீராங்கனைகள், வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேச அணி ஒருவரும் இடம் பிடித்தனர். கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் லனிங் தேர்வு செய்யப்பட்டார்.

பஞ்சாப் அணியின் நம்பிக்கை நாயகன்

பவர் பிளேவிலேயே ராபின் உத்தப்பா, மொயின் அலி ஆகியோரது விக்கெட்களை வைபவ் அரோரா வீழ்த்தினார்.

சிஎஸ்கேவுக்கு எதிராக அறிமுக வீரர் வைபவ் அரோரா சிறப்பாக பந்து வீசினார். வைபவ் அபாரமாக பந்துகளை ஸ்விங் செய்து, பிரமிக்க வைத்தார்.

குறிப்பாக தீபக் சஹாரைப் போல இன் ஸ்விங், அவுட் ஸ்விங் இரண்டையும் வீசி அசத்தினார். இவரது பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

பவர் பிளேவிலேயே ராபின் உத்தப்பா, மொயின் அலி ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியில் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்களோடு தனது 4 ஓவர்கள் நிறைவு செய்தார்.

விதவிதமான ரியாக்ஷன்ஸ்; ட்ரெண்டிங்கில் காவ்யா: ‘இதற்காகவே சன்ரைசர்ஸ் மேட்சை பாக்குறாங்கப்பா

ராஸ் டெய்லருக்கு சச்சின் வாழ்த்து

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ராஸ் டெய்லர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சர்வதேச போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று அவர் தனது கடைசி சர்வதேச போட்டியாக நெதர்லாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

அவருக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ராஸ் நீங்கள் கிரிக்கெட்டின் சிறந்த தூதராக இருந்தீர்கள்! உங்களுக்கு எதிராக விளையாடியது அற்புதமாக இருந்தது' என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sports Cricket Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: