Advertisment

ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து வெளியேறினார் ஹர்பஜன் சிங்! சறுக்கும் சி.எஸ்.கே...

சி.எஸ்.கே வெற்றிக்கு பெரும் சவால் விடும் காரணமாக இருப்பதாக ரசிகர்கள் கலங்க துவங்கியுள்ளனர். 

author-image
WebDesk
New Update
Harbhajan Singh cheating case

Harbhajan Singh cheating case

IPL2020 UAE: Chennai Super Kings Harbhajan Singh quits IPL 13 : கொரோனா நோய் தொற்றின் காரணமாக மிகவும் தாமதமாக துபாயில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாக எம்.எஸ். தோனி அறிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் வர இருக்கும் ஐ.பி.எல் போட்டிகள் மீது அனைவருக்கும் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது.

Advertisment

ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து தற்போது சொந்த காரணங்களுக்காக ஐ.பி.எல். 13-ல் இருந்து விலகுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். இது சி.எஸ்.கே வெற்றிக்கு பெரும் சவால் விடும் காரணமாக இருப்பதாக ரசிகர்கள் கலங்க துவங்கியுள்ளனர்.

மேலும் படிக்க : ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை களங்கப்படுத்தும் பாகிஸ்தான் முயற்சி வெற்றி பெற்றதா?

துபாயில் இருக்கும் தன்னுடைய டீம் நண்பர்களை பார்க்காமலேயே ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று அவர் இல்லாமலே போட்டிக்கான பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே சி.எஸ்.கே. அணிக்கு ஏதும் சரியாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும். இரண்டு வீரர்கள் உட்பட 13 நபர்களுக்கு கொரோனா சோதனை உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். துபாய் சர்வதேச விளையாட்டு அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் சி.எஸ்.கேவினர்.  3ம் முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சி.எஸ்.கே இந்த சவாலை எப்படி சமாளிக்கும் என்பதை வருகின்ற 19ம் தேதியில் இருந்து தான் நாம் பார்க்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment