/indian-express-tamil/media/media_files/P89I8dq6PoHpPHxKthee.jpg)
புரோ கபடி லீக் 2023 - 24: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ்; புனேரி பால்டன் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதல்
Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
10 புரோ கபடி லீக் தொடரில், மும்பையில் நடந்து வந்த லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், அடுத்த சுற்று ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.
இந்த புரோ கபடி தொடரில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள் விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்றது.
ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற விருவிருப்பான ஆட்டத்தித்தின் முடிவில், ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 38-க்கு 35 - என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பல்டன் அணி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய புனேரி பல்டன் அணி 37-க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.