உலகக் கோப்பை அணிக்கு திரும்புவாரா பும்ரா? பி.சி.சி.ஐ-யை சாடும் கபில் தேவ்

உலகக் கோப்பை அணிக்கு திரும்புவாரா பும்ரா? என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இந்திய உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ் பிசிசிஐ-யை கடுமையாக சாடியுள்ளார்.

உலகக் கோப்பை அணிக்கு திரும்புவாரா பும்ரா? என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இந்திய உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ் பிசிசிஐ-யை கடுமையாக சாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kapil Dev on Jasprit Bumrah and BCCI Tamil News

'இந்திய வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் சிறிய காயங்களுடன் கூட விளையாடுகிறார்கள். ஆனால் சர்வதேச போட்டியின் போது காயம் ஏற்பட்ட உடனே வீரர்கள் ஓய்வை தேர்வு செய்கிறார்கள்' என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று செவ்வாய்கிழமை டிரினிடாட்டில் நடைபெறுகிறது. இதில், வெற்றியை ருசிக்கும் அணி தொடரை கைப்பற்றும்.

அணிக்கு திரும்புவாரா பும்ரா?

Advertisment

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் முதுகில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் தனது காயத்தில் இருந்து மீண்டு வந்து இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டில் அவர் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உள்நாட்டில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், போட்டிக்கு முன்னோடியாக இருக்கும் முதல் அணியிலும், அதற்கு முன்னதாக ஆசிய கோப்பையிலும் பும்ராவின் உடற்தகுதி குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், உலகக் கோப்பை அணிக்கு திரும்புவாரா பும்ரா? என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இந்திய உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ் பிசிசிஐ-யை கடுமையாக சாடியுள்ளார்.

“பும்ராவுக்கு என்ன ஆயிற்று? அவர் மிகுந்த நம்பிக்கையுடன் பயிற்சிகளை செய்யத் தொடங்கி இருக்கிறார். ஆனால் அவர் அணியில் இல்லை என்றால் (உலகக் கோப்பை அரையிறுதி/இறுதிப்போட்டி), நாம் அவருக்காக நேரத்தை வீணடித்து இருக்கிறோம் என்றே புரிந்துகொள்ளப்படும். ரிஷப் பண்ட் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் இருந்திருந்தால், நமது டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பாக இருந்திருக்கும், ”என்று கூறினார்.

Advertisment
Advertisements

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த கார் விபத்தைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் அதிலிருந்து தற்போது மீண்டு வருகிறார். மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சமீபத்திய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளபடி, "அவரது மறுவாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" அடைந்துள்ளார்.

“கடவுள் கருணையுள்ளவர். நான் விளையாடிய நாட்களில் கடவுள் காய பிரச்சினைகளை எதிர்கொண்டதில்லை. ஐபிஎல் தொடர் சிறந்தது தான். ஆனால் சில சமயங்களில் அது உங்களை கெடுத்துவிடும். இந்திய வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் சிறிய காயங்களுடன் கூட விளையாடுகிறார்கள். ஆனால் சர்வதேச போட்டியின் போது காயம் ஏற்பட்ட உடனே வீரர்கள் ஓய்வை தேர்வு செய்கிறார்கள். மேலும் முக்கியமான போட்டிகளை இழக்கிறார்கள். இப்போது வீரர்கள் வருடத்தில் 10 மாதம் விளையாடுகிறார்கள். அது அவர்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்கும். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்கள் ஆண்டு முழுவதும் விளையாடும் போட்டிகளின் அளவை ஆராய வேண்டும்." என்று கபில் தேவ் கூறினார்.

செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான பும்ராவை அணித் தேர்வாளர்கள் சேர்க்க விரும்புவதாகவும், கடந்த இரண்டு வாரங்களில் அவர் செய்த முன்னேற்றம், அடுத்த மாதம் அவர் அயர்லாந்துக்குச் செல்லலாம் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Bcci Jasprit Bumrah Kapil Dev

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: