scorecardresearch

கோவையில் பெண்களுக்கான வுஷூ போட்டி; அதிரடி காட்டி அசத்திய மாணவிகள்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக தேசிய அளவிலான பெண்களுக்கான ஜூனியர் வுஷூ போட்டிகள் கோவையில் நடைபெற்றது

கோவையில் பெண்களுக்கான வுஷூ போட்டி; அதிரடி காட்டி அசத்திய மாணவிகள்
கோவையில் நடைபெற்ற பெண்களுக்கான வுஷூ போட்டி

கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா தேசிய அளவிலான பெண்களுக்கான வுஷூ போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக தேசிய அளவிலான பெண்களுக்கான ஜூனியர் வுஷூ போட்டிகள் கோவையில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: பாபர் அசாம் ‘புதிய மிஸ்டர் 360’ பதிவு: வறுத்தெடுக்கும் சூரியகுமார் ரசிகர்கள்

இந்திய மற்றும் தமிழ்நாடு வுஷூ சங்கம் – மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோர் இணைந்து நடத்திய இதில் கர்நாடகா, கேரளா, மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

சான்சூ, டாவுலு என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் சர்வதேச அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Kehlo india wushu competition held at kovai

Best of Express