இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடகளம் நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு ராஜூவ் கேல் ரத்னா, 8 பேருக்கு துரோணாச்சார்யா, 20 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.